search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோவையில் கைவரிசை காட்டிய நகைக்கடை கொள்ளையன் சென்னையில் கைது
    X

    கோவையில் கைவரிசை காட்டிய நகைக்கடை கொள்ளையன் சென்னையில் கைது

    • விஜய் சென்னையில் பதுங்கி இருப்பதாக கோவை போலீசாருக்கு தகவல் கிடைத்தது
    • ஐயப்ப பக்தர் போல் விஜய் மாலை அணிந்து இருந்தார்.

    கோவை:

    கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டில் உள்ள பிரபல நகைக்கடையில் கடந்த 28-ந் தேதி 4½ கிலோ நகை கொள்ளை போனது. போலீஸ் விசாரணையில் தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்த விஜய் (வயது 25) என்பவர் முகமூடி அணிந்து கடைக்குள் புகுந்து நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இந்த கொள்ளை வழக்கு தொடர்பாக விஜய்யின் மனைவி நர்மதாவை போலீசார் கைது செய்தனர். அத்துடன் விஜய் கொள்ளையடித்த நகையை குப்பை மற்றும் சாலையோரம் புதைத்து வைத்த விஜய்யின் மாமியார் யோகராணியும் கைது செய்யப்பட்டார். அவர் புதைத்து வைத்து இருந்த 4 கிலோ 300 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டன.

    இந்த நிலையில் விஜய் சென்னையில் ஒரு இடத்தில் பதுங்கி இருப்பதாக கோவை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே தனிப்படை போலீசார் சென்னை வந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி விஜய்யை கைது செய்தனர்.

    அப்போது அய்யப்ப பக்தர் போல் விஜய் மாலை அணிந்து இருந்தார். ஆனாலும் போலீசார் அவரை அடையாளம் கண்டு மடக்கி பிடித்தனர். இதையடுத்து விஜய்யை கோவைக்கு அழைத்து சென்றனர்.

    Next Story
    ×