என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    செம்பரம்பாக்கம் ஏரி 20 அடியை எட்டியது
    X

    செம்பரம்பாக்கம் ஏரி 20 அடியை எட்டியது

    • சென்னை குடிநீர் மற்றும் சிப்காட்டிற்கு என தினமும் 177 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • கடந்த இரண்டு வாரத்தில் பெய்த கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரி இன்று 20 அடியை எட்டி கடல் போல் ரம்மியமாக காட்சியளிக்கிறது.

    பூந்தமல்லி:

    கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்ட உயரமான 24 அடியில் தற்போது 20.02 அடியாகவும், மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கனஅடியில் தற்போது 2608 மில்லியன் கன அடியாகவும், ஏரிக்கு நீர் வரத்து 455 கன அடியாகவும் உள்ளது.

    சென்னை குடிநீர் மற்றும் சிப்காட்டிற்கு என தினமும் 177 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து பெய்த கன மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தற்போது கோடை காலமான ஜூன் மாதத்தில் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    கடந்த இரண்டு வாரத்தில் பெய்த கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரி இன்று 20 அடியை எட்டி கடல் போல் ரம்மியமாக காட்சியளிக்கிறது. மேலும் ஏரியின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் பொதுப் பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    Next Story
    ×