search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்பு தேர்வு: சுமார் 1 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினர்.
    X

    தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்பு தேர்வு: சுமார் 1 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினர்.

    • இந்தியாவில் மட்டுமின்றி துபாய் போன்ற அரபு நாடுகளில் வசிக்கும் இந்திய மாணவர்களும் இத்தேர்வினை இன்று எழுதினார்கள்.
    • தீவிர மேற்பார்வையில் மாணவர்கள் தேர்வு எழுதினர்.

    சென்னை:

    நாடுமுழுவதும் மத்திய கல்வி வாரிய பாடத்திட்டத்தில் (சி.பி.எஸ்.இ.) 10 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது.

    கடந்த 20-ந்தேதி பிரெஞ்சு பாடத்திட்டத்திற்கான தேர்வு நடந்தது. இன்று முதல் முக்கிய பாடப்பிரிவுகளுக்கான தேர்வு தொடங்கி நடை பெறுகிறது.

    இந்தியாவில் மட்டுமின்றி துபாய் போன்ற அரபு நாடுகளில் வசிக்கும் இந்திய மாணவர்களும் இத்தேர்வினை இன்று எழுதினார்கள். தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் மாணவ-மாணவிகள் தங்கள் படிக்கும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் தேர்வு எழுதினர்.

    இன்று ஒரேநாளில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு தேர்வு தொடங்கி உள்ளது. 10-ம் வகுப்பிற்கு தமிழ் தேர்வும், 12-ம் வகுப்பிற்கு ஆங்கில தேர்வும் நடந்தன. 2 பொதுத்தேர்வுகளும் மாறி மாறி நடக்கின்றன.

    27-ந்தேதி 10-ம் வகுப்பு ஆங்கிலம், மார்ச் 4-ந்தேதி அறிவியல், மார்ச் 15-ந்தேதி சமூக அறிவியல், 17-ந்தேதி இந்தி, 21-ந்தேதி கணிதம் ஸ்டாண்டர்டு, கணிதம் பேசிக் ஆகிய தேர்வுகள் நடைபெறுகின்றன. 10-ம் வகுப்பிற்கு மார்ச் 21-ந் தேதியுடன் தேர்வு முடிகி றது. மார்ச் 31-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    28-ந்தேதி வேதியியல், மார்ச் 6-ந்தேதி கணிதம், 13-ந்தேதி உடற்கல்வியியல், 16-ந்தேதி உயிரியியல், 17-ந்தேதி பொருளாதாரம், 23-ந்தேதி கம்ப்யூட்டர், அறிவியல் மற்றும் இன்பர் மேஷன் பிராக்ட்டிஸ், 25-ந்தேதி பிசினஸ் படிப்பு, 31-ந்தேதி கணக்குப்பதிவியல் பாடங்களுக்கு தேர்வு நடக்கிறது. தீவிர மேற்பார்வையில் மாணவர்கள் தேர்வு எழுதினர்.

    சென்னையில் டி.ஏ.வி., எவர்வின் வித்யாஸ்ரமம், மகரிஷி, பவன்ஸ், எஸ்.பி. ஓ.ஏ., விவேகானந்தா உள்ளிட்ட பல்வேறு சி.பி. எஸ்.இ. பள்ளிகளில் மாணவர்கள் உற்சாகத்துடன் தேர்வு எழுதினர்.

    Next Story
    ×