search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    9-வது நாளாக காவிரி ஆற்றில் வெள்ளம்: ஒகேனக்கல்லுக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் கனஅடியான நீர்வரத்து
    X

    9-வது நாளாக காவிரி ஆற்றில் வெள்ளம்: ஒகேனக்கல்லுக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் கனஅடியான நீர்வரத்து

    • காவிரி ஆற்றில் இருகரையும் தொட்டு மூழ்கடித்தப்படி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
    • மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளே தெரியாத அளவுக்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

    பென்னாகரம்:

    கர்நாடக மாநிலம் மற்றும் நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த 2 அணைகளின் பாதுகாப்பு கருதி உபரிநீர் 87 ஆயிரத்து 448 கனஅடி தண்ணீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    இந்தநிலையில், நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இதன் காரணமாக ஒகேனக்கல்லில் இன்று 9-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    காவிரி ஆற்றில் இருகரையும் தொட்டு மூழ்கடித்தப்படி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளே தெரியாத அளவுக்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. நீர்வரத்து அதிகரித்ததால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் 10-வது நாளாக தடை விதித்துள்ளது.

    தொடர்ந்து போலீசார், தீயணைப்பு படையினர், வருவாய் துறையினர் ஒகேனக்கல் காவிரி கரையோர பகுதியில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.

    தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றில் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர்.

    Next Story
    ×