என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கூவத்தூர் அருகே தம்பியை அடித்துக்கொன்ற அண்ணன்- சொத்து தகராறில் பயங்கரம்
- அண்ணன், தம்பிக்கு சொத்து தொடர்பாக மீண்டும் மோதல் ஏற்பட்டது.
- ஆத்திரம் அடைந்த ராமச்சந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் பத்பநாபனை சரமாரியாக தாக்கினர்.
மாமல்லபுரம்:
கூவத்தூரை அடுத்த முகையூர் தோப்பு பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது52). விவசாயி. இவருக்கும் இவரது அண்ணன் ராமச்சந்திரனுக்கும் சொத்து தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. இதனால் இருவரும் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வந்தனர்.
இதற்கிடையே நேற்று இரவும் சொத்து தொடர்பாக அவர்களுக்கு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. அப்போது ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
இதில் ஆத்திரம் அடைந்த ராமச்சந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் பத்பநாபனை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த பத்பநாபன் மயங்கி விழுந்தார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பத்மநாபன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கூவத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






