search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை 44 சதவீதம் உயர்வு
    X

    டாஸ்மாக் கடைகளில் "பீர்" விற்பனை 44 சதவீதம் உயர்வு

    • டாஸ்மாக் கடைகளில், சாதாரண நாட்களில் 80 ஆயிரம் முதல் 95 ஆயிரம் பெட்டி ‘பீர்’ விற்பனை ஆகும்.
    • ‘பீர்’ விற்பனை மட்டும், ரூ.29 கோடியே 92 லட்சத்துக்கு நடந்துள்ளது.

    சென்னை:

    வெப்பம் வாட்டி வதைத்து வரும் சூழலில், டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்களின் முதல் தேர்வாக 'கூலிங் பீர்'தான் இருந்து வருகிறது. வழக்கமாக கோடை காலங்களில் டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அதிகமாக இருக்கும்.

    அந்த வகையில் நடப்பாண்டில் வெப்பத்தின் தாக்கம் இயல்பைவிட அதிகமாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பெரும்பாலான மதுப்பிரியர்கள் 'பீர்' வாங்கி குடிக்கின்றனர். இதனால் டாஸ்மாக் கடைகளில் 'பீர்' விற்பனை அதிகரித்துள்ளது.

    டாஸ்மாக் கடைகளில், சாதாரண நாட்களில் 80 ஆயிரம் முதல் 95 ஆயிரம் பெட்டி 'பீர்' விற்பனை ஆகும். ஆனால் இப்போது 1 லட்சத்து 36 ஆயிரம் பெட்டி 'பீர்' விற்பனை செய்யப்பட்டு வருவதாக டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    அந்த வகையில் பார்க்கும் போது இது வழக்கமான நாட்களில் விற்பனை ஆகும் 'பீர்' பாட்டில்களைவிட 44 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 'பீர்' விற்பனை அதிகரித்து இருப்பதால், டாஸ்மாக் நிறுவனத்துக்கான வருவாயும் உயர்ந்திருக்கிறது. அதாவது ரூ.20 கோடி விற்பனை அதிகரித்துள்ளது.

    உதாரணமாக, நேற்று முன்தினம் சென்னை, திருச்சி, சேலம், மதுரை, கோவை மண்டலம் என மொத்தம் தமிழ்நாட்டில் 162 கோடியே 83 லட்சத்துக்கு மதுப்பாட்டில்கள் விற்பனை ஆகி இருந்தது.

    இதில் 'பீர்' விற்பனை மட்டும், ரூ.29 கோடியே 92 லட்சத்துக்கு நடந்துள்ளது. அதாவது, மொத்த விற்பனை விலையில் 18 சதவீதம் பீர் விற்பனைதான் இருக்கிறது.

    Next Story
    ×