என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ரூ.44 லட்சத்துடன் மாயமான விழுப்புரம் வங்கி கேஷியர் கைது- பணம் பறிமுதல்
    X

    ரூ.44 லட்சத்துடன் மாயமான விழுப்புரம் வங்கி கேஷியர் கைது- பணம் பறிமுதல்

    • விழுப்புரம் அருகே உள்ள சிந்தாமணி கிராமத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளை உள்ளது
    • முகேஷிடம் விசாரித்தபோது சென்னை சென்றதாகவும், அங்கிருந்து கிருஷ்ணகிரி, சேலம், திருக்கோவிலூர் சென்று பின்னர் விழுப்புரம் வந்ததாக தெரிவித்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே உள்ள சிந்தாமணி கிராமத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளை உள்ளது. இங்கு கேஷியராக விழுப்புரம் அருகே உள்ள இளங்காட்டை சேர்ந்த முகேஷ் (30) பணியாற்றி வந்தார்.

    இவர் நேற்று முன்தினம் வங்கி பணம் ரூ.43 லட்சத்து 89 ஆயிரத்துடன் மாயமானார். இதுகுறித்து வங்கி கிளை மேலாளர் விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். டி.எஸ்.பி. பார்த்திபன் தலைமையில் தனிப்படை அமைத்து வங்கி கேஷியரை தேடி வந்தனர். இந்த நிலையில் கேஷியர் முகேஷ் தன்னை ஒரு கும்பல் கடத்தி விட்டதாக வாட்ஸ் அப் ஆடியோவை உறவினர் ஒருவருக்கு அனுப்பி இருந்தார்.

    அவரது செல்போனை ஆய்வு செய்தபோது சென்னை திருவான்மியூரில் இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் சென்னை விரைந்து சென்றனர்.

    மேலும் விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளிலும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் முகேஷ் நின்று கொண்டிருந்தார். அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ. 43 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ. 90 ஆயிரத்தை மட்டும் அவர் உறவினர் ஒருவருக்கு அனுப்பி இருப்பது தெரிய வந்தது.

    முகேஷிடம் விசாரித்தபோது சென்னை சென்றதாகவும், அங்கிருந்து கிருஷ்ணகிரி, சேலம், திருக்கோவிலூர் சென்று பின்னர் விழுப்புரம் வந்ததாக தெரிவித்தார்.

    அவரை யாராவது கடத்தி சென்று விடுவித்தார்களா? அல்லது கடத்தல் நாடகம் ஆடினாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×