search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இலங்கைக்கு 450 கிலோ கடல் அட்டைகளை கடத்த முயற்சி- பறிமுதல் செய்து போலீசார் விசாரணை
    X

    இலங்கைக்கு 450 கிலோ கடல் அட்டைகளை கடத்த முயற்சி- பறிமுதல் செய்து போலீசார் விசாரணை

    • போலீசார் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • சாக்கு மூட்டைகளில் 250 கிலோ தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் கடத்தி செல்வதற்கு பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி, வேதாளை, பாம்பன், மண்டபம் உள்ளிட்ட கடல்பகுதிகள் இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக நாட்டுப் படகுகளில் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடல் அட்டை, சமையல் மஞ்சள், கடல் பல்லி, கஞ்சா உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருட்கள் கடத்தி செல்வது அதிகரித்துள்ளது.

    மேலும் இலங்கையில் இருந்து கடல் வழியாக தமிழகத்திற்கு தங்கம் கடத்திவரப்படுவதால் இந்திய-இலங்கை சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல் படை போலீசார் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் மண்டபம் அடுத்த வேதாளை-அரியமான் இடையே வடக்கு கடற்கரை பகுதியில் கடலோர இந்திய கடலோர காவல் படையினர் ரோந்து சென்றனர். அப்போது கடற்கரை ஓரமாக கிடந்த சாக்கு மூட்டைகளை பிரித்து சோதனை செய்தனர். இதில் சாக்கு மூட்டைகளில் 250 கிலோ தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் கடத்தி செல்வதற்கு பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டது.

    இதனையடுத்து கடல் அட்டைகளை பறிமுதல் செய்த இந்திய கடலோர காவல் படையினர் அதனை மண்டபம் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

    இதேபோல் ராமேசுவரம் சேராங்கோட்டை கடற்கரை பகுதியில் சாக்கு மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 200 கிலோ கடல் அட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×