search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சேலத்தில்  அண்ணாமலை பாதயாத்திரை நாளை தொடக்கம்
    X

    சேலத்தில் அண்ணாமலை பாதயாத்திரை நாளை தொடக்கம்

    • முதல் 4 நாட்கள் அண்ணாமலை சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
    • சேலம்-நாமக்கல் சாலையில் பனமரத்துப்பட்டி பிரிவு அருகே சேலம் பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    என் மண், என் மக்கள் என்ற பெயரில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார். இதையொட்டி நாளை (3-ந் தேதி ) முதல் 4 நாட்கள் அண்ணாமலை சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    அதன்படி நாளை (3-ந் தேதி) காலை 11 மணியளவில் ஏற்காடு தொகுதிக்குட்பட்ட பேளூரில் சுற்றுப்பயணத்தை தொடங்கி மக்களை சந்திக்கிறார். 3 மணிக்கு ஆத்தூர் தொகுதியில் ஆத்தூர் டவுன் பகுதியிலும், மாலை 6 மணிக்கு கெங்கவல்லி தொகுதியில் தம்மம்பட்டியிலும் பாத யாத்திரை செல்கிறார்.

    4-ந் தேதி காலை 11 மணிக்கு ஓமலூர் தொகுதிக்கு ட்பட்ட ஓமலூரிலும், மதியம் 3 மணிக்கு வீர பாண்டி தொகுதி இளம்பிள்ளையிலும், மாலை 6 மணிக்கு எடப்பாடி பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார்.

    5-ந் தேதி காலை 11 மணிக்கு சேலம் மாநகரில் பாத யாத்திரை நிகழ்ச்சி தொடங்குகிறது. இதில் மாநகர தலைவர் சுரேஷ்பாபு தலைமையில் சேலம் மேற்கு சட்ட சபை தொகுதிக்குட்பட்ட சேலம் 5 ரோடு முதல் மெய்யனூர் சாலை வரையிலும் மதியம் 2 மணி வரைக்கும், செவ்வாய்ப்பேட்டை முக்கோணம் முதல் அரசு ஆஸ்பத்திரி வரை மாலை 5 மணிக்கும், தெற்கு சட்டசபை தொகுதிக்குட்பட்ட குகை முதல் தாதகாப்பட்டி வரை இரவு 7 மணிக்கும் பாதயாதத்திரை மேற்கொண்டு மக்களை சந்திக்க உள்ளார்.

    8-ந் தேதி காலை 11 மணிக்கு மேட்டூர் தொகுதி மேச்சேரியில் பா.ஜனதா தலைவர் பாதயாத்திரை செல்கிறார். மேலும் சேலம்-நாமக்கல் சாலையில் பனமரத்துப்பட்டி பிரிவு அருகே சேலம் பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை நாளை (3-ந் தேதி) காலை 9 மணிக்கு மாநில தலைவர் அண்ணாமலை திறந்து வைத்து உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைக்கிறார்.

    இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தலைவர்கள் சுரேஷ்பாபு, சண்முகநாதன், சுதிர் முருகன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×