search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆழியாறு அணை நீர் விவகாரம்: துரைமுருகன் 1-ந்தேதி ஆலோசனை
    X

    ஆழியாறு அணை நீர் விவகாரம்: துரைமுருகன் 1-ந்தேதி ஆலோசனை

    • ஆழியாறு அணையிலிருந்து கூட்டுக் குடிநீர் திட்டம் ஒன்றை செயல்படுத்திட தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியம் உத்தேசித்துள்ளது.
    • ஆழியாறு அணையிலிருந்து நீர் எடுப்பதற்கு பி.ஏ.பி பாசனதார விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்டத்தின் கீழ் உள்ள ஆழியாறு அணையிலிருந்து, ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதிக்கு குடிநீர் வழங்குவதற்காக, கூட்டுக் குடிநீர் திட்டம் ஒன்றை செயல்படுத்திட தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியம் உத்தேசித்துள்ளது.

    இத்திட்டத்திற்காக ஆழியாறு அணையிலிருந்து நீர் எடுப்பதற்கு பி.ஏ.பி பாசனதார விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே இப்பிரச்சினை குறித்து அனைத்து தரப்பினரையும் கலந்தாலோசித்து, சுமூகத் தீர்வு காண்பதற்காக, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல்துறை அமைச்சர் நேரு ஆகியோர் தலைமையில் வருகிற 1-ந்தேதி அன்று, சென்னை, தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×