search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு
    X

    கும்பக்கரை அருவியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் இன்று காலை முதல் சீரான தண்ணீர் வந்த வண்ணம் உள்ளது


    முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு

    • வைகை அணையின் நீர்மட்டம் 58.20 அடியாக உள்ளது.
    • கொடைக்கானலில் பெய்த கன மழை காரணமாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி முதல் போக பாசனத்திற்காக கடந்த 1ந் தேதி 300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் 200 கன அடி பாசனத்திற்கும், 100 கன அடி தேனி மாவட்ட குடிநீர் தேவைக்கும் வெளியேற்றப்பட்டது.

    அதன்பிறகு பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு 300 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இன்று காலை முதல் பாசனத்திற்கு 400 கன அடியும், குடிநீர் தேவைக்கு 100 கன அடி என மொத்தம் 500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 131.15 அடியாக உள்ளது. நீர்வரத்து 137 கன அடி. நீர் இருப்பு 4966 மி.கன அடி.

    வைகை அணையின் நீர்மட்டம் 58.20 அடியாக உள்ளது. நீர்வரத்து இல்லை. பாசனத்திற்கு 800 கன அடி, மதுரை மாநகர குடிநீருக்கு 69 கன அடி என மொத்தம் 869 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 3267 மி.கன அடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 42.30 அடி. வரத்து 80 கனஅடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 82.32 அடி. திறப்பு 3 கன அடி.

    முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் மூலம் லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர்கள் மூலம் மின் உற்பத்தி நடைபெறுகிறது. அதன்படி கடந்த 1ந் தேதி முதல் 400 கனஅடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில் 36 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இன்று காலை முதல் 500 கன அடி வெளியேற்றப்படுவதால் 45 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இதேபோல் கொடைக்கானலில் பெய்த கனமழை காரணமாக கும்பக்கரை அருவியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து இங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இன்று காலை முதல் அருவிக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்து சீராக உள்ளது. இதனைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. இன்று காலை முதல் அங்கு சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் சென்று குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

    Next Story
    ×