search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வேடசந்தூரில் ரேசன் ஊழியரை மிரட்டிய தி.மு.க நிர்வாகி
    X

    அமீர்பாட்சா.

    வேடசந்தூரில் ரேசன் ஊழியரை மிரட்டிய தி.மு.க நிர்வாகி

    • அமீர்பாட்சா ஏராளமான ரேசன் கார்டுகளை கையில் வைத்துக்கொண்டு தனக்கு பொருட்கள் வழங்குமாறு கேட்டார்.
    • எனக்கு பொருட்கள் வழங்காவிட்டால் நீ இங்கே வேலை பார்க்கமுடியாது என மிரட்டியுள்ளார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் எஸ்.ஏ.பி.நகரில் ரேசன் கடை உள்ளது. இந்த கடையில் விற்பனையாளராக மேனகா(32) என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த கடைக்கு வந்த அதேபகுதியை சேர்ந்த தி.மு.க பிரமுகரான அமீர்பாட்சா ஏராளமான ரேசன் கார்டுகளை கையில் வைத்துக்கொண்டு தனக்கு பொருட்கள் வழங்குமாறு கேட்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மேனகா உங்கள் கார்டுக்கு மட்டுமே பொருட்கள் வழங்கப்படும். மற்றவர்கள் கார்டுகளை மொத்தமாக எதற்காக கொண்டு வந்தீர்கள் என கேட்டார்.

    என்னிடமே நியாயம் கேட்கிறாயா என அமீர்பாட்சா அந்த விற்பனையாளரை மிரட்டி நான் பல ஆண்டுகளாகவே இதேபோல மொத்தமாக மூட்டை மூட்டையாக வாங்கி சென்றுள்ளேன். நீ புதிதாக வந்ததால் உனக்கு அதைப்பற்றி தெரியாது. எனக்கு பொருட்கள் வழங்காவிட்டால் நீ இங்கே வேலை பார்க்கமுடியாது என மிரட்டியுள்ளார். மேனகா கெஞ்சியும் அவர் கேட்காமல் மிரட்டும் தொனியில் அவர் பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    எனவே சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×