search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 700 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்
    X

    திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 700 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

    • ஆந்திராவுக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக திருவள்ளூர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • ரேசன் அரசி கடத்தல் கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் இருந்து ரெயில் மூலம் ஆந்திராவுக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக திருவள்ளூர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இன்ஸ்பெக்டர் ஜெபாஸ்டியன் மற்றும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டபோது ரெயில்நிலைய நடைமேடையில் கேட்பாரற்று கிடந்த 23 மூட்டை ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். மொத்தம் 700 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. அதனை மர்ம நபர்கள் ஆந்திராவுக்கு கடத்தி செல்ல முயன்றபோது போலீசாரின் கண்காணிப்பால் ரெயில் நிலைய நடைமேடையில் போட்டு மர்ம நபர்கள் தப்பி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது. ரேசன் அரசி கடத்தல் கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×