search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முயல் வேட்டையாடி இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட 7 பேர் கைது
    X

    முயல் வேட்டையாடி கைதானவர்களை காணலாம்.

    முயல் வேட்டையாடி இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட 7 பேர் கைது

    • வனபாதுகாப்பு படை அலுவலர் கிருஷ்ணகுமார், அய்யலூர் வனஅலுவலர் மணிகண்டன் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
    • வனவிலங்குகளை வேட்டையாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வடமதுரை:

    வடமதுரை, அய்யலூரை சுற்றி ஏராளமான மலைகிராமங்கள் உள்ளன. இதில் மான், முயல், காட்டுப்பன்றி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனவிலங்குகளை வேட்டையாடுவதை தடுக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    இந்தநிலையில் மோளப்பாடியூர் பகுதியில் வேட்டை நாய்களை வைத்து கும்பல் முயல்களை பிடித்து இறைச்சியை விற்பனை செய்து வருவதாக சென்னை வனப்பாதுகாப்பு படைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. அதனைதொடர்ந்து வனபாதுகாப்பு படை அலுவலர் கிருஷ்ணகுமார், அய்யலூர் வனஅலுவலர் மணிகண்டன் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    அப்போது 7 பேர் முயல்வேட்டையில் ஈடுபட்டது தெரியவந்தது. முயல்வேட்டையாடிய முத்து, பழனியாண்டி, மணிகண்டன், கார்த்திகேயன், சுபாஷ், மலையாளம், லோகமணிகண்டன் ஆகியோரை கைது செய்தனர். இதில் முத்துக்கு ரூ.50ஆயிரமும், மற்றவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் என மொத்தம் ரூ.2லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

    தொடர்ந்து வனவிலங்குகளை வேட்டையாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×