search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    5 தலைமுறையை கடந்தவர்: பிறந்தநாள் கொண்டாடிய 103 வயது மூதாட்டி
    X

    5 தலைமுறையை கடந்தவர்: பிறந்தநாள் கொண்டாடிய 103 வயது மூதாட்டி

    • பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளுடன் வந்திருந்து மூதாட்டியிடம் ஆசி பெற்றுச் சென்றனர்.
    • எங்க பாட்டிக்கு பிறந்தநாள் விழா கொண்டாடுவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் முத்துராயன் ஜீ பியில் வசித்து வருபவர் மூதாட்டி வெங்கடலட்சுமம்மா (வயது 103), இவருடைய பிறந்தநாளை, குடும்பத்தினர் நேற்று கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடினர்.

    மூதாட்டி வெங்கடலட்சுமம்மாவுக்கு நேற்று 103-வது பிறந்த நாள் ஆகும். இவருக்கு 6 மகள்கள் உள்ள நிலையில், இவருடைய குடும்பத்தில், மொத்தம் 5 தலைமுறையாக உள்ள 217 பேர் நேற்று ஒரே இடத்தில் கூடி பிறந்தநாள் விழாவை பட்டாசு வெடித்துகொண்டாடியும், கேக் வெட்டி மூதாட்டிக்கு ஊட்டிவிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    இந்த மூதாட்டி வழியில் வந்தவர்கள், அண்டை மாநிலமான கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் இருந்தும் உறவினர்கள் தங்களது பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளுடன் வந்திருந்து மூதாட்டியிடம் ஆசி பெற்றுச் சென்றனர்.

    இதுகுறித்து அவரது பேரப்பிள்ளை கூறுகையில், நான் நான்காவது தலைமுறையாக உள்ளேன். எனது மகன் தற்போது 5-வது தலைமுறையாக உள்ளான். இன்று எங்க பாட்டிக்கு பிறந்தநாள் விழா கொண்டாடுவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதேபோல் நாங்களும் வாழ வேண்டும். எங்கள் பாட்டியும் இன்னும் நீண்ட நாட்கள் ஆயுளுடன் வாழ வேண்டும் என ஆசைப்படுவதாகவும் தெரிவித்தார்.

    மேலும், எங்கள் பாட்டி இதுவரை மருத்துவமனைக்கு ஒருமுறை மட்டும் தான் சென்று வந்துள்ளார். அவருக்கு கண் காது உள்ளிட்ட அனைத்து உறுப்புகளும் நன்றாக உள்ளது.

    அவரே தன்னுடைய அன்றாட வேலைகளை செய்து கொள்கிறார். அவர், கேழ்வரகு மற்றும் சோள களியை தான் அதிகம் விரும்பி சாப்பிடுவார். ஒரு சில நேரங்களில் இட்லி, தோசை கொடுத்து வருகிறோம் என்றும் தெரிவித்தார்.

    விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் அறுசுவை சைவஉணவு பரிமாறப்பட்டது.

    Next Story
    ×