search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நாகை மாவட்டத்தில் 50 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை- படகுகள் துறைமுகத்தில் நிறுத்தி வைப்பு
    X

    நாகை மாவட்டத்தில் 50 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை- படகுகள் துறைமுகத்தில் நிறுத்தி வைப்பு

    • பல்வேறு மீனவ கிராமங்களைச் சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
    • 25 மீனவ கிராமங்களை சேர்ந்த 700 விசைப்படகுகளும், 3 ஆயிரம் பைபர் படகுகளும் துறைமுகம் மற்றும் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாற வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் வருகிற 8-ந்தேதி வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் மற்றும் தமிழக மீன்வளத்துறை மூலம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

    நாகை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், கல்லார், செருதூர், நாகூர் நம்பியார்நகர், சாமந்தான்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களைச் சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    இதனால் 25 மீனவ கிராமங்களை சேர்ந்த 700 விசைப்படகுகளும், 3 ஆயிரம் பைபர் படகுகளும் துறைமுகம் மற்றும் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×