search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை, நெல்லை மண்டல மாவட்ட பதிவாளர்கள் கூண்டோடு மாற்றம்
    X

    சென்னை, நெல்லை மண்டல மாவட்ட பதிவாளர்கள் கூண்டோடு மாற்றம்

    • மயிலாடுதுறை மாவட்ட பதிவாளர் ஆர்.எஸ்.முத்துக்குமார், தென்சென்னை மாவட்ட பதிவாளராக மாற்றப்பட்டுள்ளார்.
    • உறையூர் சார்பதிவாளர் ஏ.உமாதேவி செங்கல்பட்டு மாவட்ட பதிவாளராக மாற்றப்பட்டுள்ளார்.

    சென்னை:

    பதிவுத்துறையில் மாவட்ட பதிவாளர்கள் நிலையில் ஒரே இடத்தில் அதிக நாட்களாக பணியாற்றிய 36 பேர் நேற்று அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை, நெல்லை மண்டலங்களில் பணியாற்றியவர்கள் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர். இதற்கான உத்தரவை வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் பா.ஜோதி நிர்மலாசாமி பிறப்பித்துள்ளார்.

    பதிவுத்துறையில் நிர்வாக காரணங்களின் அடிப்படையில் மாவட்ட பதிவாளர்கள் நிலையில் பணியிட மாறுதல்கள் செய்யப்பட்டுள்ள அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தியாகராயநகர் சார்பதிவாளர் கே.செந்தில்நாதன் மாவட்ட பதிவாளராக தஞ்சாவூருக்கும், செய்யார் மாவட்ட பதிவாளர் ஜி.அறிவழகன் செங்கல்பட்டு மாவட்ட பதிவாளராகவும், வடசென்னை இணை சார்பதிவாளர் ஏ.கலைச்செல்வி செய்யார் மாவட்ட பதிவாளராகவும், தென்சென்னை மாவட்ட பதிவாளர் ஆர்.வெங்கடேசன் கன்னியாகுமரி மாவட்ட பதிவாளராகவும், மயிலாடுதுறை மாவட்ட பதிவாளர் ஆர்.எஸ்.முத்துக்குமார், தென்சென்னை மாவட்ட பதிவாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

    திருவல்லிக்கேணி சார்பதிவாளர் ஜோ.இ.அனு ஸ்வாதிகா தென்காசி மாவட்ட பதிவாளராகவும், அம்பத்தூர் சார்பதிவாளர் ஏ.சிவக்குமார் நாமக்கல் மாவட்ட பதிவாளராகவும், அடையார் சார்பதிவாளர் ஆர்.பாண்டியராஜன் புதிதாக உருவாக்கப்பட்ட பணியிடமான காரைக்குடி மாவட்ட பதிவாளராகவும், மத்திய சென்னை இணை சார்பதிவாளர் டி.ராஜேந்திரன் திண்டிவனம் மாவட்ட பதிவாளராகவும், திருவள்ளூர் மாவட்ட பதிவாளர் பி.கல்பனா புதிதாக உருவாக்கப்பட்ட சேலம் கிழக்கு மாவட்ட பதிவாளராகவும் மாற்றப்படுகின்றனர்.

    பழனி மாவட்ட பதிவாளர் எம்.பாவேந்தன் திருவள்ளூர் மாவட்ட பதிவாளராகவும், மயிலாப்பூர் சார்பதிவாளர் ஏ.முகம்மது சாதிக் சிதம்பரம் மாவட்ட பதிவாளராகவும், கோடம்பாக்கம் சார்பதிவாளர் எம்.தேவகி, திருநெல்வேலி மாவட்ட பதிவாளராகவும், மத்திய சென்னை மாவட்ட பதிவாளர் வி.புவனேஸ்வரி விழுப்புரம் மாவட்ட பதிவாளராகவும், திருச்சி இணை சார்பதிவாளர் கே.சுசீலா மத்திய சென்னை மாவட்ட பதிவாளராகவும், சென்னை அண்ணாநகர் சார்பதிவாளர் ஆர்.அகிலா சென்னை பதிவுத்துறை பயிற்சி நிலையத்தின் விரிவுரையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    காஞ்சிபுரம் மாவட்ட பதிவாளர் எம்.ராமச்சந்திரன் புதிதாக உருவாக்கப்பட்ட கோபிசெட்டிப்பாளையம் மாவட்ட பதிவாளராகவும், திருச்சி இணை சார்பதிவாளர் சி.முரளி காஞ்சிபுரம் மாவட்ட பதிவாளராகவும், காஞ்சிபுரம் மாவட்ட பதிவாளர் ஆ.செந்தூர்பாண்டியன் திருப்பத்தூர் மாவட்ட பதிவாளராகவும், சேலம் கிழக்கு இணை சார்பதிவாளர் ஜி.அமுதா காஞ்சிபுரம் மாவட்ட பதிவாளராகவும், உறையூர் சார்பதிவாளர் ஏ.உமாதேவி செங்கல்பட்டு மாவட்ட பதிவாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×