என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
சென்னை-காட்டுப்பள்ளி துறைமுகத்தில் கண்டெய்னர் லாரிகள் 2-வது நாளாகவேலை நிறுத்தம்- அதிகாரிகள் இன்று பேச்சு வார்த்தை
- சென்னை, காட்டுப்பள்ளி துறைமுகங்களில் கண்டெய்னர் லாரிகள் ஓடவில்லை. துறைமுகம் பகுதி வெறிச்சோடி கிடக்கிறது.
- துறைமுகங்களில் ஏற்றுமதி, இறக்குமதி முழுவதும் பாதிக்கப்பட்டு உள்ளது.
ராயபுரம்:
சென்னை மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களில் சரக்கு பெட்டகங்களை கையாளும் கண்டெய்னர் டிரெய்லர் லாரிகளுக்கு வாடகை கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி துறைமுக ஒப்பந்த கூட்டமைப்பினர் நேற்று முதல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதனால் சென்னை, காட்டுப்பள்ளி துறைமுகங்களில் கண்டெய்னர் லாரிகள் ஓடவில்லை. துறைமுகம் பகுதி வெறிச்சோடி கிடக்கிறது.
இந்த நிலையில் கண்டெய்னர் லாரி ஸ்டிரைக் இன்று 2-வது நாளாக நீடித்து வருகிறது. இதன் காரணமாக துறைமுகங்களில் ஏற்றுமதி, இறக்குமதி முழுவதும் பாதிக்கப்பட்டு உள்ளது. பல கோடி மதிப்பிலான பொருட்கள் தேக்கம் அடைந்து உள்ளன.
இதற்கிடையே சென்னை துறைமுக தலைவர் மற்றும் அதிகாரிகள் இன்று பெட்டக முனைய உரிமையாளர்கள், கண்டெய்னர் துறைமுக ஒப்பந்த கூட்ட மைப்பினர் உள்ளிட்ட அமைப்புகளுடன்சென்னை துறைமுகத்தில் பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள்.
இதில் எடுக்கப்படும் முடிவை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று துறைமுக ஒப்பந்த கூட்டமைப்பினர் தெரிவித்து உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்