search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 46 ஆக அதிகரிப்பு

    தமிழகத்தில் 65-வது நாளாக எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை.
    சென்னை:

    தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. 

    அதன் விவரம் வருமாறு:- 

    தமிழகத்தில் புதிதாக 14 ஆயிரத்து 339 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.  இதில் ஆண்கள் 28 பேரும், பெண்கள் 18 பேரும் உள்பட 46 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    9 மாவட்டங்களில் மட்டும் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. 29 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை. மேலும் 13 மாவட்டங்கள் கொரோனாவே இல்லாத மாவட்டங்களாக உருவாகியுள்ளது. 

    தமிழகத்தில் 65-வது நாளாக எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை.  40 பேர் கொரோனா நோயில் இருந்து குணமடைந்து இன்று டிஸ்சார்ஜ்' செய்யப் பட்டுள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×