என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
கோவில்பட்டியில் பெண் தொழிலாளி வீட்டில் இருந்த 8 தோட்டாக்கள் பறிமுதல்
Byமாலை மலர்30 April 2022 6:09 AM GMT (Updated: 30 April 2022 6:09 AM GMT)
பெண் தொழிலாளி வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள் யாருக்கு சொந்தமானது? இவை உரிமம் பெற்ற தோட்டாக்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சீனிவாசன் நகரை சேர்ந்தவர் ஆனந்தவள்ளி.
இவரது கணவர் இறந்து விட்டார். நூற்பாலையில் வேலைபார்த்து வரும ஆனந்தவள்ளி அதே பகுதியை சேர்ந்த குட்டி என்ற பெண்ணிடம் கடன் வாங்கியதாகவும், அதனை அவர் திருப்பி கொடுக்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து அவர்களிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆனந்த வள்ளியிடம், குட்டி பணத்தை கேட்டுள்ளார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
மேலும் ஆனந்தவள்ளி வீட்டு சாவியை குட்டி பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆனந்தவள்ளி ராஜபாளையத்தில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்நிலையில் நேற்று குட்டி, ஆனந்தவள்ளி வீட்டிற்கு சென்று அங்கு இருந்த பீரோவை திறந்து பார்த்துள்ளார். அதில் 8 துப்பாக்கி தோட்டாக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று 8 தோட்டக்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக குட்டி, ஆனந்தவள்ளி ஆகிய 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த துப்பாக்கி தோட்டாக்கள் யாருக்கு சொந்தமானது? இவை உரிமம் பெற்ற தோட்டாக்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சீனிவாசன் நகரை சேர்ந்தவர் ஆனந்தவள்ளி.
இவரது கணவர் இறந்து விட்டார். நூற்பாலையில் வேலைபார்த்து வரும ஆனந்தவள்ளி அதே பகுதியை சேர்ந்த குட்டி என்ற பெண்ணிடம் கடன் வாங்கியதாகவும், அதனை அவர் திருப்பி கொடுக்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து அவர்களிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆனந்த வள்ளியிடம், குட்டி பணத்தை கேட்டுள்ளார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
மேலும் ஆனந்தவள்ளி வீட்டு சாவியை குட்டி பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆனந்தவள்ளி ராஜபாளையத்தில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்நிலையில் நேற்று குட்டி, ஆனந்தவள்ளி வீட்டிற்கு சென்று அங்கு இருந்த பீரோவை திறந்து பார்த்துள்ளார். அதில் 8 துப்பாக்கி தோட்டாக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று 8 தோட்டக்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக குட்டி, ஆனந்தவள்ளி ஆகிய 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த துப்பாக்கி தோட்டாக்கள் யாருக்கு சொந்தமானது? இவை உரிமம் பெற்ற தோட்டாக்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X