என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
ஊட்டி தாவரவியல் பூங்காவில் சினிமா படப்பிடிப்பை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்
Byமாலை மலர்12 March 2022 4:06 AM GMT (Updated: 12 March 2022 4:06 AM GMT)
ஊட்டி தாவரவியல் பூங்காவில் சினிமா படப்பிடிப்பு நடப்பதை அறிந்த அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் திரண்டு படக்காட்சிகளை கண்டு ரசித்தனர்.
ஊட்டி:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக மலைபிரதேசமான ஊட்டியில் சினிமா படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்தது. ஊரடங்கு தளர்வுக்குபின் அவ்வப்போது சினிமா படப்பிடிப்பு அனுமதியுடன் நடந்து வருகிறது.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஒரு நாள் படப்பிடிப்புக்கு ரூ.50 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சினிமா படம் இங்கு எடுக்கப்பட்டது. அதன் பின்னர் எந்த படப்பிடிப்பும் நடக்கவில்லை.
இந்த நிலையில் 1 வருடத்திற்கு பிறகு நூற்றாண்டு பழமை வாய்ந்த தாவரவியல் பூங்காவில் நேற்று சினிமா படப்பிடிப்பு நடைபெற்றது.
‘சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் என்ற பாஸ்கரன்’ படங்களை இயக்கிய இயக்குனர் ராஜேஷ், நடிகர் முகேன்ராவ், நடிகை ஹன்சிகா ஆகியோர் நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தின் காட்சிகள் பூங்கா பெரிய புல்வெளி மைதானத்தில் படமாக்கப்பட்டது.
இதற்காக மைதானத்தில் தற்காலிக கூடாரம் அமைக்கப்பட்டு, விளக்குகள் பொருத்தப்பட்டன. மைதானத்தில் அமைக்கப்பட்ட கல்லறை காட்சியில் முகேன் ராவ் அஞ்சலி செலுத்துவது போன்ற காட்சிகளும், அங்கு அவர் காரில் வருவது போன்ற காட்சிகளும் படமாக்கப்பட்டது.
பூங்காவில் சினிமா படப்பிடிப்பு நடப்பதை அறிந்த அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் திரண்டு படக்காட்சிகளை கண்டு ரசித்தனர். மேலும் நடிகர் முகேன் ராவுடன் அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் சிலர் புகைப்படமும் எடுத்து கொண்டனர்.
இதுகுறித்து படக்குழுவினர் கூறும்போது, பெயரிடப்படாத திரைப்படம் இயற்கை காட்சிகள் நிறைந்த ஊட்டியில் படமாக்கப்பட்டு வருகிறது. ஊட்டி, கோத்தகிரியில் சில நாட்கள் காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்தனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக மலைபிரதேசமான ஊட்டியில் சினிமா படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்தது. ஊரடங்கு தளர்வுக்குபின் அவ்வப்போது சினிமா படப்பிடிப்பு அனுமதியுடன் நடந்து வருகிறது.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஒரு நாள் படப்பிடிப்புக்கு ரூ.50 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சினிமா படம் இங்கு எடுக்கப்பட்டது. அதன் பின்னர் எந்த படப்பிடிப்பும் நடக்கவில்லை.
இந்த நிலையில் 1 வருடத்திற்கு பிறகு நூற்றாண்டு பழமை வாய்ந்த தாவரவியல் பூங்காவில் நேற்று சினிமா படப்பிடிப்பு நடைபெற்றது.
‘சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் என்ற பாஸ்கரன்’ படங்களை இயக்கிய இயக்குனர் ராஜேஷ், நடிகர் முகேன்ராவ், நடிகை ஹன்சிகா ஆகியோர் நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தின் காட்சிகள் பூங்கா பெரிய புல்வெளி மைதானத்தில் படமாக்கப்பட்டது.
இதற்காக மைதானத்தில் தற்காலிக கூடாரம் அமைக்கப்பட்டு, விளக்குகள் பொருத்தப்பட்டன. மைதானத்தில் அமைக்கப்பட்ட கல்லறை காட்சியில் முகேன் ராவ் அஞ்சலி செலுத்துவது போன்ற காட்சிகளும், அங்கு அவர் காரில் வருவது போன்ற காட்சிகளும் படமாக்கப்பட்டது.
பூங்காவில் சினிமா படப்பிடிப்பு நடப்பதை அறிந்த அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் திரண்டு படக்காட்சிகளை கண்டு ரசித்தனர். மேலும் நடிகர் முகேன் ராவுடன் அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் சிலர் புகைப்படமும் எடுத்து கொண்டனர்.
இதுகுறித்து படக்குழுவினர் கூறும்போது, பெயரிடப்படாத திரைப்படம் இயற்கை காட்சிகள் நிறைந்த ஊட்டியில் படமாக்கப்பட்டு வருகிறது. ஊட்டி, கோத்தகிரியில் சில நாட்கள் காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X