என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    உறவினருடன் வீடியோகால் பேசியபடி தற்கொலை செய்த ஓட்டல் மேலாளர்

    காதலித்த பெண்ணுக்கு வேறு வாலிபருடன் திருமணமானதால் மனம் உடைத்த ஓட்டல் மேலாளர் உறவினருடன் வீடியோகால் பேசியபடி தற்கொலை செய்து கொண்டார்.
    கோபி:

    கேரள மாநிலம் குருவாயூர் அருகே உள்ள தாழைக்குளம் என்ற பகுதியை சேர்ந்தவர் ரியாஸ் (41). இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். குடும்ப தகராறு காரணமாக கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு ரியாசை விட்டு அவரது மனைவி குழந்தையுடன் பிரிந்து சென்றார்.

    இதையடுத்து ரியாஸ் பெங்களூரில் உள்ள ஒரு ஓட்டலில் மேலாளராக வேலை பார்த்து வந்தார். இவர் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பஜனை தெருவில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து அடிக்கடி வந்து சென்றார்.

    இந்நிலையில் ரியாஸ் பெங்களூரை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண்ணுக்கு திருமணமாகி விட்டது. இதனால் அவர் மனம் உடைந்து காணப்பட்டார்.

    இந்நிலையில் ரியாஸ் நேற்று இரவு தனது உறவினர் நிஷாத் (48) என்பவருடன் செல்போனில் வீடியோகால் மூலம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது தான் காதலித்த பெண் வேறு வாலிபருடன் திருமணம் செய்து கொண்டதால் என்னால் வாழ முடியவில்லை. எனவே நான் தற்கொலை செய்ய போகிறேன் என்று கூறி உள்ளார்.

    இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர் நிஷாத், ரியாசை சமாதானப்படுத்தினார். ஆனால் அவர் கேட்கவில்லை.

    இதையடுத்து வீடியோ காலில் பேசியபடியே ரியாஸ் பேனில் தூக்கு மாட்டிக் கொண்டு தொங்கினார். இதையடுத்து அவரது உறவினர் செய்வதறியாது திகைத்து நின்றார். இந்த நிலையில் ரியாசின் செல்போன் இணைப்பு துண்டித்தது.

    ஆனாலும் நிஷாத் தொடர்ந்து செல்போனில் அழைத்து கொண்டு இருந்தார். அந்த நேரத்தில் வீட்டின் உரிமையாளரின் மகன் படித்து கொண்டிருந்தார். நீண்ட நேரமாக ரியாஸ் அறையில் செல்போன் ஒலித்துக் கொண்டிருந்ததால் அவர் அங்கு சென்று பார்த்தார்.

    அப்போது ஜன்னலை திறந்து பார்த்தபோது அங்கு ரியாஸ் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து ரியாசை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அப்போது அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் குருவாயூரில் இருந்து ரியாசின் உறவினர்கள் கோபிசெட்டிபாளையத்துக்கு விரைந்தனர். அவர்கள் வந்தால்தான் முழு விபரமும் தெரிய வரும்.
    Next Story
    ×