என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

டாஸ்மாக்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்- டாஸ்மாக் கடைகள், பார்களை மூட உத்தரவு
மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பினை கடைபிடிக்க தவறும் பட்சத்தில் மதுபான விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெ.விஜயா ராணி வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:-
நகரப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல் 2022 - வாக்குப்பதிவு நாளுக்கு முன்னதாக 17.02.2022 காலை 10.00 மணி முதல், வாக்குப்பதிவு நாளான 19.02.2022 நள்ளிரவு 12.00 மணி வரையிலும், மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான 22.02.2022 வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளிலும் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் விற்பனைக் கடைகளும் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள், எப்எல்2 முதல் எப்எல்11 வரை (எப்எல்6 தவிர) உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும் என உத்தரவிடப்படுகிறது.
மேற்படி நேரத்தில் மாநிலத்தில் எந்தவொரு மதுபானத்தையும் விற்பனை செய்யவோ அல்லது வெளியில் கொண்டு செல்லவோ கூடாது என்றும் இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. மேற்படி மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பினை கடைபிடிக்க தவறும் பட்சத்தில் மதுபான விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Next Story






