என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தீவிபத்து
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஈஞ்ஞாறு கிராமத்தில் நியோ பயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
இன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதற்கிடையில் பட்டாசு ஆலையில் மராமத்து பணியும் நடந்து வந்தது.
ராஜபாளையத்தை சேர்ந்த மாரீஸ்வரன் இந்த பணியில் ஈடுபட்டார். அவர் கட்டிட மேற்கூரை பகுதியில் மின்சார வெல்டிங் கொண்டு பணி செய்து கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட தீப்பொறி அந்த அறையில் இருந்த பட்டாசுகளில் பட்டதால் தீ விபத்து ஏற்பட்டது.
இதனை பார்த்ததும் பட்டாசு ஆலையில் பணியில் இருந்த தொழிலாளர்கள் அவசர அவசரமாக வெளியேறினர். சிலர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் மாரீஸ்வரன் லேசான காயம் அடைந்தார்.
தீ விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.
சிறிய அளவில் விபத்து நடந்ததாலும் அதனை ஊழியர்கள் உடனடியாக பார்த்து விட்டதாலும் அதிர்ஷ்டவசமாக தொழிலாளர்கள் உயிர் தப்பினர்.
விபத்து குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஈஞ்ஞாறு கிராமத்தில் நியோ பயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
இன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதற்கிடையில் பட்டாசு ஆலையில் மராமத்து பணியும் நடந்து வந்தது.
ராஜபாளையத்தை சேர்ந்த மாரீஸ்வரன் இந்த பணியில் ஈடுபட்டார். அவர் கட்டிட மேற்கூரை பகுதியில் மின்சார வெல்டிங் கொண்டு பணி செய்து கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட தீப்பொறி அந்த அறையில் இருந்த பட்டாசுகளில் பட்டதால் தீ விபத்து ஏற்பட்டது.
இதனை பார்த்ததும் பட்டாசு ஆலையில் பணியில் இருந்த தொழிலாளர்கள் அவசர அவசரமாக வெளியேறினர். சிலர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் மாரீஸ்வரன் லேசான காயம் அடைந்தார்.
தீ விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.
சிறிய அளவில் விபத்து நடந்ததாலும் அதனை ஊழியர்கள் உடனடியாக பார்த்து விட்டதாலும் அதிர்ஷ்டவசமாக தொழிலாளர்கள் உயிர் தப்பினர்.
விபத்து குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






