என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து
Byமாலை மலர்8 Feb 2022 8:41 AM GMT (Updated: 8 Feb 2022 8:41 AM GMT)
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஈஞ்ஞாறு கிராமத்தில் நியோ பயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
இன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதற்கிடையில் பட்டாசு ஆலையில் மராமத்து பணியும் நடந்து வந்தது.
ராஜபாளையத்தை சேர்ந்த மாரீஸ்வரன் இந்த பணியில் ஈடுபட்டார். அவர் கட்டிட மேற்கூரை பகுதியில் மின்சார வெல்டிங் கொண்டு பணி செய்து கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட தீப்பொறி அந்த அறையில் இருந்த பட்டாசுகளில் பட்டதால் தீ விபத்து ஏற்பட்டது.
இதனை பார்த்ததும் பட்டாசு ஆலையில் பணியில் இருந்த தொழிலாளர்கள் அவசர அவசரமாக வெளியேறினர். சிலர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் மாரீஸ்வரன் லேசான காயம் அடைந்தார்.
தீ விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.
சிறிய அளவில் விபத்து நடந்ததாலும் அதனை ஊழியர்கள் உடனடியாக பார்த்து விட்டதாலும் அதிர்ஷ்டவசமாக தொழிலாளர்கள் உயிர் தப்பினர்.
விபத்து குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஈஞ்ஞாறு கிராமத்தில் நியோ பயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
இன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதற்கிடையில் பட்டாசு ஆலையில் மராமத்து பணியும் நடந்து வந்தது.
ராஜபாளையத்தை சேர்ந்த மாரீஸ்வரன் இந்த பணியில் ஈடுபட்டார். அவர் கட்டிட மேற்கூரை பகுதியில் மின்சார வெல்டிங் கொண்டு பணி செய்து கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட தீப்பொறி அந்த அறையில் இருந்த பட்டாசுகளில் பட்டதால் தீ விபத்து ஏற்பட்டது.
இதனை பார்த்ததும் பட்டாசு ஆலையில் பணியில் இருந்த தொழிலாளர்கள் அவசர அவசரமாக வெளியேறினர். சிலர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் மாரீஸ்வரன் லேசான காயம் அடைந்தார்.
தீ விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.
சிறிய அளவில் விபத்து நடந்ததாலும் அதனை ஊழியர்கள் உடனடியாக பார்த்து விட்டதாலும் அதிர்ஷ்டவசமாக தொழிலாளர்கள் உயிர் தப்பினர்.
விபத்து குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X