என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
பள்ளிபாளையத்தில் பறக்கும்படை சோதனையில் ரூ.3 லட்சம் பிடிபட்டது
Byமாலை மலர்29 Jan 2022 3:12 PM GMT (Updated: 29 Jan 2022 3:12 PM GMT)
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி பள்ளிபாளையத்தில் பறக்கும்படை சோதனையில் ரூ.3 லட்சம் பிடிபட்டது.
பள்ளிப்பாளையம்:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.
இந்த நிலையில் பள்ளிபாளையம் பகுதியில் கைத்தறி ஆய்வாளர் ராஜேஸ்குமார் தலைமையிலான பறக்கும் படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். காரில் பழனிசாமி, தியானேஸ்வரன் ஆகிய 2 பேர் இருந்தனர்.
மேலும் காரில் ரூ.3 லட்சம் இருந்தது. இதையடுத்து அதை அதிகாரிகள் கைப்பற்றினர். பின்னர் அந்த பணம் தேர்தல் ஆணைய அறிவுரைப்படி திருச்செங்கோடு சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
காரில் வந்தவர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து இந்த பணத்தை திரும்ப பெறலாம் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X