என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நளினி-முருகன்
பரோலில் வந்துள்ள நளினி ஜெயிலில் முருகனை சந்திக்க அனுமதி
நளினி வேலூர் மத்திய சிறையில் முருகனை சந்திக்க வரும்போது கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைப்பிடித்து சந்திக்கலாம் என சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வேலூர்:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது ஒரு மாத பரோலில் வெளியே வந்துள்ள நளினி காட்பாடி பிரம்மபுரத்தில் தங்கியுள்ளார். தினமும் காட்பாடி போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார்.
கோர்ட்டு உத்தரவுப்படி நளினி முருகன் இருவரும் 15 நாளைக்கு ஒரு முறை ஜெயிலில் நேரில் சந்தித்து வந்தனர். தற்போது பரோலில் வந்துள்ள நளினி, முருகனை சந்தித்து பேச அனுமதிக்க வேண்டும் என்று வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தார்.
இந்த மனுவை சிறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நளினி, முருகன் இருவரும் சந்தித்து பேச அனுமதி அளித்துள்ளனர்.
நளினி வேலூர் மத்திய சிறையில் முருகனை சந்திக்க வரும்போது கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைப்பிடித்து சந்திக்கலாம் என சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வருகிற 8-ந்தேதி வேலூர் ஜெயிலில் முருகன் நளினி சந்திப்பு நடைபெற வாய்ப்பு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது ஒரு மாத பரோலில் வெளியே வந்துள்ள நளினி காட்பாடி பிரம்மபுரத்தில் தங்கியுள்ளார். தினமும் காட்பாடி போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார்.
கோர்ட்டு உத்தரவுப்படி நளினி முருகன் இருவரும் 15 நாளைக்கு ஒரு முறை ஜெயிலில் நேரில் சந்தித்து வந்தனர். தற்போது பரோலில் வந்துள்ள நளினி, முருகனை சந்தித்து பேச அனுமதிக்க வேண்டும் என்று வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தார்.
இந்த மனுவை சிறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நளினி, முருகன் இருவரும் சந்தித்து பேச அனுமதி அளித்துள்ளனர்.
நளினி வேலூர் மத்திய சிறையில் முருகனை சந்திக்க வரும்போது கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைப்பிடித்து சந்திக்கலாம் என சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வருகிற 8-ந்தேதி வேலூர் ஜெயிலில் முருகன் நளினி சந்திப்பு நடைபெற வாய்ப்பு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Next Story






