என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி சகோதரி மகன்கள், டிரைவரிடம் தீவிர விசாரணை
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எங்கு சென்றார் என்பதை கண்டறிய அவரது உறவினர்கள் மற்றும் கட்சியினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விருதுநகர்:
அ.தி.மு.க. ஆட்சியில் அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் ராஜேந்திர பாலாஜியும், அவரது உதவியாளர்கள் 3 பேரும் தலைமறைவாகி விட்டனர்.
ராஜேந்திர பாலாஜி எங்கு சென்றார் என்பதை கண்டறிய அவரது உறவினர்கள் மற்றும் கட்சியினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் ராஜேந்திர பாலாஜியின் கார் டிரைவர் ராஜ்குமார், சகோதரியின் மகன்களான வசந்தகுமார், ரமணன் ஆகிய 3 பேரையும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்துவதற்காக அழைத்து சென்றனர். திருத்தங்கல் போலீஸ் நிலையத்தில் வைத்து 3 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரும் விசாரணை மேற்கொண்டார். இதனை அறிந்த ராஜேந்திரபாலாஜியின் ஆதரவாளர்கள் திருத்தங்கல் போலீஸ் நிலையத்தின் முன்பு திரண்டனர். மோசடி வழக்கில் தொடர்பு இல்லாத அவர்களை விசாரணைக்கு அழைத்து வந்தது ஏன்? என்று போலீசாரிடம் கேட்டனர்.
மேலும் அவர்களை விடுவிக்குமாறு கோரிக்கை வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து ராஜேந்திர பாலாஜி சகோதரியின் மகன்கள் மற்றும் டிரைவரிடம் திருத்தங்கல் போலீஸ் நிலையத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அவர்கள் 3 பேரும் மாவட்ட குற்றப்பிரிவுக்கு இன்று காலை அழைத்து வரப்பட்டு தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டனர். ராஜேந்திர பாலாஜி இருக்கும் இடம் பற்றி விசாரணை நடந்து வருகிறது.
அ.தி.மு.க. ஆட்சியில் அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் ராஜேந்திர பாலாஜியும், அவரது உதவியாளர்கள் 3 பேரும் தலைமறைவாகி விட்டனர்.
ராஜேந்திர பாலாஜி எங்கு சென்றார் என்பதை கண்டறிய அவரது உறவினர்கள் மற்றும் கட்சியினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் ராஜேந்திர பாலாஜியின் கார் டிரைவர் ராஜ்குமார், சகோதரியின் மகன்களான வசந்தகுமார், ரமணன் ஆகிய 3 பேரையும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்துவதற்காக அழைத்து சென்றனர். திருத்தங்கல் போலீஸ் நிலையத்தில் வைத்து 3 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரும் விசாரணை மேற்கொண்டார். இதனை அறிந்த ராஜேந்திரபாலாஜியின் ஆதரவாளர்கள் திருத்தங்கல் போலீஸ் நிலையத்தின் முன்பு திரண்டனர். மோசடி வழக்கில் தொடர்பு இல்லாத அவர்களை விசாரணைக்கு அழைத்து வந்தது ஏன்? என்று போலீசாரிடம் கேட்டனர்.
மேலும் அவர்களை விடுவிக்குமாறு கோரிக்கை வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து ராஜேந்திர பாலாஜி சகோதரியின் மகன்கள் மற்றும் டிரைவரிடம் திருத்தங்கல் போலீஸ் நிலையத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அவர்கள் 3 பேரும் மாவட்ட குற்றப்பிரிவுக்கு இன்று காலை அழைத்து வரப்பட்டு தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டனர். ராஜேந்திர பாலாஜி இருக்கும் இடம் பற்றி விசாரணை நடந்து வருகிறது.
Next Story






