என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தொடர் மழையால் வீடு இடிந்து விழுந்தது- அதிர்ஷ்டவசமாக 5 பேர் உயிர் தப்பினர்
Byமாலை மலர்24 Nov 2021 3:48 AM GMT (Updated: 24 Nov 2021 3:48 AM GMT)
அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 6 மணி முதல் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையம் கோவிந்தன் வீதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (52). இவரது மனைவி நித்தியா (40). இவர்களுக்கு காவியா (18), பவித்ரா (20) என்ற 2 மகள்கள் உள்ளனர். இவர்களுடன் ஈஸ்வரியின் தந்தை முருகன் (75) என்பவரும் வசித்து வருகிறார்.
ஈஸ்வரன் தனது வீட்டிலேயே கைத்தறியில் பட்டுப்புடவை நெய்யும் தொழில் செய்து வந்தார். இவரது வீடு மண்ணால் ஆன ஓட்டு வீடு ஆகும்.
அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஈஸ்வரனின் மண் வீடு ஈரப்பதம் காரணமாக உறுதி தன்மையை இழந்து வந்தது.
இந்நிலையில் அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 6 மணி முதல் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் வீட்டின் உறுதி தன்மை மேலும் வலுவிழந்தது. மழை பெய்தபோது ஈஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர்.
நள்ளிரவு 12 மணி அளவில் திடீரென வீட்டின் ஓடுகள் சரிந்து விழும் சத்தம் கேட்டது. இதையடுத்து சுதாரித்துக்கொண்ட ஈஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினர் அவசர அவசரமாக வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். அப்போது கண் இமைக்கும் நேரத்தில் வீடு முழுவதும் இடிந்து விழுந்து அமுக்கியது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதமானது. சரியான நேரத்தில் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்ததால் 5 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பின்னர் ஈஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள உறவினர் வீட்டில் சென்று இரவு தங்கினர். இதுபற்றி தெரியவந்ததும் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ, பேரூராட்சி செயல் அலுவலர் ரவி, தாசில்தார் விஜயகுமார் ஆகியோர் விரைந்து சென்று ஈஸ்வரனுக்கு ஆறுதல் கூறினர்.
மேலும் வீடு இடிந்து விழுந்ததில் தலா ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 12 பட்டு சேலைகள் தயார் செய்ய வைத்திருந்த நூல் பாவு சேதம் அடைந்தது. இதுகுறித்து அந்தியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையம் கோவிந்தன் வீதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (52). இவரது மனைவி நித்தியா (40). இவர்களுக்கு காவியா (18), பவித்ரா (20) என்ற 2 மகள்கள் உள்ளனர். இவர்களுடன் ஈஸ்வரியின் தந்தை முருகன் (75) என்பவரும் வசித்து வருகிறார்.
ஈஸ்வரன் தனது வீட்டிலேயே கைத்தறியில் பட்டுப்புடவை நெய்யும் தொழில் செய்து வந்தார். இவரது வீடு மண்ணால் ஆன ஓட்டு வீடு ஆகும்.
அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஈஸ்வரனின் மண் வீடு ஈரப்பதம் காரணமாக உறுதி தன்மையை இழந்து வந்தது.
இந்நிலையில் அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 6 மணி முதல் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் வீட்டின் உறுதி தன்மை மேலும் வலுவிழந்தது. மழை பெய்தபோது ஈஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர்.
நள்ளிரவு 12 மணி அளவில் திடீரென வீட்டின் ஓடுகள் சரிந்து விழும் சத்தம் கேட்டது. இதையடுத்து சுதாரித்துக்கொண்ட ஈஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினர் அவசர அவசரமாக வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். அப்போது கண் இமைக்கும் நேரத்தில் வீடு முழுவதும் இடிந்து விழுந்து அமுக்கியது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதமானது. சரியான நேரத்தில் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்ததால் 5 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பின்னர் ஈஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள உறவினர் வீட்டில் சென்று இரவு தங்கினர். இதுபற்றி தெரியவந்ததும் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ, பேரூராட்சி செயல் அலுவலர் ரவி, தாசில்தார் விஜயகுமார் ஆகியோர் விரைந்து சென்று ஈஸ்வரனுக்கு ஆறுதல் கூறினர்.
மேலும் வீடு இடிந்து விழுந்ததில் தலா ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 12 பட்டு சேலைகள் தயார் செய்ய வைத்திருந்த நூல் பாவு சேதம் அடைந்தது. இதுகுறித்து அந்தியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X