search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரவிச்சந்திரன் - சோதனை நடைபெறும் அடுக்குமாடி குடியிருப்பு
    X
    ரவிச்சந்திரன் - சோதனை நடைபெறும் அடுக்குமாடி குடியிருப்பு

    ஸ்ரீவைகுண்டம் அருகே பதிவுத்துறை அதிகாரி-உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை

    பதிவுத்துறை அதிகாரியின் மாமனார் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவகளையை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் கும்பகோணம் மாவட்ட பதிவுத்துறை அலுவலகத்தில் மேலாளராக உள்ளார்.

    ரவிச்சந்திரன் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் விளாத்திகுளம் சப்- ரிஜிஸ்டராக பணிபுரிந்தார். அங்கு பத்திரப்பதிவின்போது பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர் மீது புகார் எழுந்தது.

    இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறையினர் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 14-ந் தேதி சோதனையிட்டதில் அவரிடம் இருந்து ரூ. 3 லட்சம் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது.

    தொடர்ந்து, அவர் கும்பகோணம் மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் மேலாளராக பணி இடமாற்றம் செய்யப்படார்.

    இதற்கிடையே கணக்கில் வராத பணம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் ரவிச்சந்திரன், அவரது மனைவி சுதா மற்றும் மாமனார் சுந்தரராஜன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு துறையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான 6 வீடுகள் உள்ளது. இந்நிலையில் ரவிச்சந்திரனின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் சுதா, ஜெயராணி ஆகியோர் தலைமையில் 2 வாகனங்களில் வந்த 15 லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை 6 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

    அதே போல் அங்குள்ள அவரது மாமனார் சுந்தரராஜனின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
    Next Story
    ×