search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    நூல் விலை உயர்வை கண்டித்து 2-வது நாளாக ஜவுளி கடைகள் அடைப்பு

    ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள், குடோன்கள் அடைக்கப்பட்டு இருந்தன. இதன் காரணமாக நேற்று ஒரே நாளில் ரூ.50 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
    ஈரோடு:

    நூல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஜவுளி உற்பத்தி தொழிலில் ஈடுபடும் வியாபாரிகள் ஜவுளி உற்பத்தி செய்த விலைக்கு விற்பனை செய்ய முடியாமல் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

    நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த இரண்டு மாதத்திற்கு ஒரு முறை அல்லது மாதம் ஒருமுறை நூல் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் சார்பில் 2 நாட்கள் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி நேற்று முதல் நாள் நூல் விலை உயர்வை கண்டித்து கடையடைப்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள், குடோன்கள் அடைக்கப்பட்டு இருந்தன. இதன் காரணமாக நேற்று ஒரே நாளில் ரூ.50 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது. இந்த கடைக்கு போராட்டத்திற்கு 18 அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருந்தன.

    இதைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக ஜவுளி கடைகள், குடோன்கள் என 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் எப்போதும் பரபரப்பாக காட்சி அளிக்கும் திருவெங்கடசாமி வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, அகில்மேடு வீதி போன்ற பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. 2 நாட்கள் கடையடைப்பு போராட்டம் காரணமாக ரூ.100 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
    Next Story
    ×