என் மலர்tooltip icon

    செய்திகள்

    அத்திவரதர் கோவில் குளம் நிரம்பிய காட்சி.
    X
    அத்திவரதர் கோவில் குளம் நிரம்பிய காட்சி.

    அத்திவரதர் கோவில் குளம் 2 ஆண்டுக்கு பிறகு நிரம்பியது

    தொடர்மழை காரணமாக காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் குளம் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் முழுமையாக நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கிறது.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை 48 நாட்கள் அத்தி வரதர் வைபவ திருவிழா நடைபெறுவது வழக்கம் கடைசியாக 2019-ம் ஆண்டு நடைபெற்றது.

    2019-ம் ஆண்டுக்கு பிறகு அத்தி வரதர் வைக்கப்பட்டுள்ள ஆனந்தசரஸ் குளத்தில் தற்போது தண்ணீர் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

    வழக்கமாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு தமிழகம் மட்டும் இல்லாமல் குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா, கேரளா என பல்வேறு வெளி மாநில, வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். தற்போது அத்தி வரதர் கோவில் குளம் நிரம்பியதால் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் கோவிலுக்கு தங்கள் குடும்பத்துடன் வருகை தந்து குளத்தில் நின்று புகைப்படம் எடுத்து சென்று மகிழ்ந்து வருகின்றனர்.

    கடந்த 2019-ம் ஆண்டு நடந்த அத்தி வரதர் திருவிழாவின் போது ஒரு கோடிக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×