search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அப்துல்கலாம் சமாதி முன்பு குடும்பத்தினர், ஜமாத் நிர்வாகிகள் தொழுகை நடத்தினர்
    X
    அப்துல்கலாம் சமாதி முன்பு குடும்பத்தினர், ஜமாத் நிர்வாகிகள் தொழுகை நடத்தினர்

    90வது பிறந்தநாள்- அப்துல்கலாம் மணிமண்டபத்தில் குடும்பத்தினர் மலரஞ்சலி

    ராமேசுவரம் பேக்கரும்பில் உள்ள மணிமண்டபத்தில் அப்துல் கலாமின் சமாதி முன்பு குடும்பத்தினர் மற்றும் ஜமாத் நிர்வாகிகள் தொழுகை நடத்தினர்.
    ராமேசுவரம்:

    முன்னாள் ஜனாதிபதி மறைந்த அப்துல் கலாமின் 90-வது பிறந்த நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.

    இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், பேக்கரும்பில் உள்ள மணிமண்டபத்தில் அப்துல் கலாமின் சமாதி முன்பு குடும்பத்தினர் மற்றும் ஜமாத் நிர்வாகிகள் தொழுகை நடத்தினர். அதன் பின்னர் சமாதிக்கு மலர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து இனிப்பு வழங்கி பிறந்த நாளை கொண்டாடினர்.

    அப்துல் கலாம்

    இந்த நிகழ்ச்சியில் அப்துல் கலாம் பேரன்கள் சேக்சலீம் சேக் தாவூத், அண்ணன் மகள் நசீமாபேகம் மற்றும் குடும்பத்தினர், நடிகர் தாமு உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


    Next Story
    ×