search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    காட்பாடியில் ஆட்டோ டிரைவர் செல்போனில் 15 இளம்பெண்களின் ஆபாச வீடியோ

    காட்பாடியில் ஆட்டோ டிரைவர் பெண்கள் குளிப்பதை பார்ப்பது, செல்போனில் அவற்றை படம் பிடிப்பது என ஒரு சைக்கோ போல செயல்பட்டு வந்துள்ளார்.
    வேலூர்:

    காட்பாடி விருதம்பட்டு அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஆடம்ஸ் (வயது45). ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

    கடந்த 21-ந் தேதிஆடம்ஸ் அவரது வீட்டு மொட்டை மாடியில் இருந்தார். அப்போது பக்கத்து வீட்டு இளம்பெண் குளிப்பதை அவரது செல்போனில் படம் பிடித்தார்.

    இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் அலறி கூச்சலிட்டார்.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனால் ஆடம்ஸ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். மறுநாள் காலையில் ஆடம்ஸ் ஆட்டோவில் வீட்டுக்கு வந்தார். இதைக்கண்ட இளம்பெண்ணின் உறவினர்கள் அவரை பிடிக்க வந்தனர். அப்போது அவர் வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார்.

    ஆடம்ஸ் வந்த ஆட்டோவை இளம்பெண்ணின் உறவினர்கள் கீழே தள்ளினர். மேலும் இதுகுறித்து விருதம்பட்டு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டுக்குள் பதுங்கி இருந்த ஆடம்சை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

    போலீசார் அவருடைய செல்போனை வாங்கி சோதனை செய்தனர். அதில் சுமார் 15 பெண்கள் குளிக்கும் ஆபாச காட்சிகள் பதிவாகி இருந்தன.

    ஆடம்ஸ் 15 இளம்பெண்கள் குளிக்கும் போது ஆபாசம் படம் எடுத்து அதனைப் பார்த்து ரசித்து வந்துள்ளார்.

    பெண்கள் குளிப்பதை பார்ப்பது, செல்போனில் அவற்றை படம் பிடிப்பது என ஒரு சைக்கோ போல செயல்பட்டு வந்துள்ளார். ஆடம்ஸ் செல்போனில் சுமார் 15 பெண்களின் ஆபாச படம் இருந்தாக போலீசார் தெரிவித்தனர்.

    கடைசியாக அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் குளிப்பதை செல்போனில் படம் எடுத்த போது மாட்டிக் கொண்டார். போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஆடம்சை கைது செய்தனர். இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×