என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    அரியலூரில் ஒரே நாள் இரவில் 36 ரவுடிகள் கைது- போலீசார் அதிரடி நடவடிக்கை

    தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் அரியலூரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை மேற்கொண்டார். இதன் படி ஒரு இரவில் 36 ரவுடிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
    அரியலூர்:

    தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொடூர கொலை சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக அவற்றில் பழிக்குப்பழியாக நடந்த கொலைகள் சற்று அதிகம் இருந்தன. மேலும் கொள்ளை சம்பவங்களும் அதிகரித்தன. இந்த கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டவர்களும், கொலையானவர்களும் பலர் ரவுடிகள் பட்டியலில் இருந்தனர்.

    போலீசார் என்னதான் நடவடிக்கை எடுத்தாலும், கொலையானவர்களின் உறவினர்கள் வன்மம் வைத்து கொலையாளிகள் ஜாமினில் வெளிவரும் போது அவர்களை பழி தீர்த்துக் கொள்கிறார்கள். இந்த சம்பவம் தொடர்கதைபோல் முடிவில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இதே போல் கொள்ளை சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.

    தற்போது அதிகரித்து வரும் கொலை, கொள்ளை, வழிபறி போன்ற குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில், ரவுடிகள், கொலை, கொள்ளை, வழிபறி போன்றவற்றில் ஈடுபட்டு கைதாகி ஜாமீனில் உள்ள ரவுடிகள், தலைமறைவாக உள்ளவர்களை கைது செய்ய டி.ஜி.பி., போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

    இதனை தொடர்ந்து அரியலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் ரவுடிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். அதற்கு பலனாக அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாள் இரவில் 36 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். மேலும் ரவுடிகளின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தி, அவர்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்து, குற்றங்களில் செயல்படாமல் இருக்க வேண்டும் என்று எச்சரித்து, அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Next Story
    ×