search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலையுண்ட  சத்யபிரியா - கள்ளக்காதலன் ஞானகுருசாமி
    X
    கொலையுண்ட சத்யபிரியா - கள்ளக்காதலன் ஞானகுருசாமி

    அருப்புக்கோட்டையை சேர்ந்த இளம்பெண் கொலை: 8 மாதங்களுக்கு பின் எலும்பு கூடாக மீட்பு - கள்ளக்காதலன் கைது

    அருப்புக்கோட்டை பகுதியில் இளம்பெண் கொலை செய்யப்பட்டு 8 மாதங்களுக்குப் பின்பு எலும்புக்கூடாக மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அருப்புக்கோட்டை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கூத்திப்பாறையை சேர்ந்த லிங்கம் மகள் சத்யபிரியா (வயது 21). இவருக்கும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த வசந்தபாண்டி (26) என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    7 மாதங்களுக்கு பின்பு பேறுகாலத்திற்காக அருப்புக்கோட்டைக்கு வந்த சத்யபிரியா குழந்தை பெற்றும் கணவர் வீட்டுக்குச் செல்லாமல் தந்தையுடன் வாழ்ந்து வந்தார்.

    இந்த நிலையில் சத்யபிரியாவுக்கும், சாத்தூர் கம்மாச்சூரங்குடியை சேர்ந்த ஞானகுருசாமி என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர்.

    இதை தொடர்ந்து சத்திய பிரியா ஞானகுருசாமியிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தினார். திருமணம் செய்து கொள்ளாவிட்டால் ஞானகுருசாமி பெயரை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினாராம்.

    கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி வேலைக்கு சென்ற சத்ய பிரியா, அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை. மகளை காணாதது குறித்து தந்தை லிங்கம் கடந்த ஆண்டு ஆகஸ்டு 25-ந்தேதி அருப்புக்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இதன் அடிப்படையில் கடந்த 8 மாதங்களாக விசாரணை நடத்திய போலீ சார், சத்தியபிரியாவின் மொபைல் நம்பரை வைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவருடன் அடிக்கடி பேசியவர் ஞானகுரு சாமி என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து ஞானகுரு சாமியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், சத்யபிரியா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்திய காரணத்தால் சாத்தூர் போக்குவரத்து நகர் பின்புறம் உள்ள காட்டுப்பகுதிக்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 13-ந் தேதி அழைத்து சென்றேன். அங்கு சத்யபிரியாவை அவர் அணிந்திருந்த துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்தேன்.

    கொலை செய்துவிட்டு உடலை அங்கேயே விட்டுச் சென்றதாகவும் விசாரணையில் தெரிவித் தார்.

    அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் ஞானகுருசாமியை கைது செய்து சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். மேலும் சத்யபிரியா காணாமல் போனதாக பதியப்பட்ட வழக்கை கொலை வழக்காக மாற்றி தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அருப்புக்கோட்டை பகுதியில் இளம்பெண் கொலை செய்யப்பட்டு 8 மாதங்களுக்குப் பின்பு எலும்புக்கூடாக மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

    Next Story
    ×