என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடலூர் அருகே தாய், மகள் வெட்டிக்கொலை
Byமாலை மலர்2 March 2021 2:05 AM GMT (Updated: 2 March 2021 2:05 AM GMT)
கடலூர் அருகே தாய், மகள் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
புதுச்சேரி மாநிலம் நோனாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம். இவருடைய மனைவி விஜயலட்சுமி (வயது 48). இவர்களுடைய மகள் மாதங்கி என்கிற சந்தியா (24). மகன் சிவகுரு.
சிதம்பரம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இதையடுத்து விஜயலட்சுமி தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி அருகே உள்ள எடையார்பாளையம் தென்னந்தோப்பு பகுதியில் விஜயலட்சுமி, சந்தியா ஆகிய 2 பேரும் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
விஜயலட்சுமியும், சந்தியாவும் மர்மநபர்களால் கத்தியால் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. ஆனால் அவர்கள் எதற்காக கொலை செய்யப்பட்டார்கள் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.
அந்த இடத்தில் மதுபாட்டில்கள், கப்புகள், சிகரெட்டுகளும், பணமும் சிதறிக்கிடந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றினர்.
பின்னர் இறந்த விஜயலட்சுமி, சந்தியா ஆகியோரின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலைக்கான காரணத்தை கண்டறிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் 3 தனிப்படை போலீசார் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலம் நோனாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம். இவருடைய மனைவி விஜயலட்சுமி (வயது 48). இவர்களுடைய மகள் மாதங்கி என்கிற சந்தியா (24). மகன் சிவகுரு.
சிதம்பரம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இதையடுத்து விஜயலட்சுமி தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி அருகே உள்ள எடையார்பாளையம் தென்னந்தோப்பு பகுதியில் விஜயலட்சுமி, சந்தியா ஆகிய 2 பேரும் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
விஜயலட்சுமியும், சந்தியாவும் மர்மநபர்களால் கத்தியால் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. ஆனால் அவர்கள் எதற்காக கொலை செய்யப்பட்டார்கள் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.
அந்த இடத்தில் மதுபாட்டில்கள், கப்புகள், சிகரெட்டுகளும், பணமும் சிதறிக்கிடந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றினர்.
பின்னர் இறந்த விஜயலட்சுமி, சந்தியா ஆகியோரின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலைக்கான காரணத்தை கண்டறிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் 3 தனிப்படை போலீசார் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X