என் மலர்
செய்திகள்

அ.தி.மு.க. பிரமுகர் மோகன் வெள்ளோட்டாம் பரப்பு கிராம நிர்வாக அலுவலகம் முன்பு போராட்டம் நடத்திய காட்சி.
வி.ஏ.ஓ. அலுவலகம் முன்பு அ.தி.மு.க. பிரமுகர் போராட்டம்
கொடுமுடி அருகே இன்று காலை வி.ஏ.ஓ. அலுவலகம் முன்பு அ.தி.மு.க. பிரமுகர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொடுமுடி:
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள வெள்ளோட்டம் பரப்பு பேரூராட்சி நடுப்பாளையத்தை சேர்ந்தவர் மோகன் (வயது 43) இவர் வெள்ளோட்டாம் பரப்பு அ.தி.மு.க. மாணவரணி செயலாளர் மற்றும் தகவல் தொழிற்நுட்ப பிரிவில் உள்ளார்.
இவருக்கு நடுப்பாளையத்தில் விவசாய இடம் உள்ளது. அந்த விவசாய இடத்தை சர்வே செய்து தர வேண்டும் என கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அதற்கான கட்டணத்தை செலுத்தினார். அரசு விதிப்படி இடத்தை பணம் கட்டிய 7 நாட்களுக்குள் சர்வே செய்து தகவல் தர வேண்டும்.
அதன் பின் 30 நாட்களுக்குள் முறைப்படி நிலத்தை அளந்து கொடுக்க வேண்டும். மோகன் இது குறித்து அதிகாரிகளை சந்தித்து நிலத்தை அளந்து கொடுக்கும் படி அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்தி வந்தார். ஆனால் அதிகாரிகள் நிலத்தை அளந்து கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று (செவ்வாய்கிழமை) காலை 6 மணிக்கு அ.தி.மு.க. பிரமுகர் மோகன் வெள்ளோட்டாம் பரப்பு கிராம நிர்வாக அலுவலகம் வந்தார். அவர் நடுப்பாளையம் கிராம நிர்வாக அலுவலர், மற்றும் கொடுமுடி நிலஅளவை துறையினரை கண்டித்து அலுவலகம் முன்பு திடீரென அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
இது பற்றி தகவல் அறிந்ததும் இன்று காலை கிளாம்பாடி நில வருவாய் ஆய்வாளர் தங்கமணி, வெள்ளோட்டம் பரப்பு கிராம நிர்வாக அதிகாரி வாசுகி மற்றும் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
அவர்கள் அ.தி.மு.க. பிரமுகரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அவர் நிலத்தை அளந்து தந்தால் தான் இங்கு இருந்து வருவேன் என கூறினார். இதையடுத்து நிலத்தை அளந்து தர அதிகாரிகள் உறுதி கூறினர். தொடர்ந்து கொடுமுடி சர்வேயர் கோபி அவர் இடத்தை அளந்து கொடுப்பதற்காக சென்றார். இதையடுத்து அவர் போராட்டத்தை கைவிட்டு சென்றார்.
அ.தி.மு.க. பிரமுகரே அரசு அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள வெள்ளோட்டம் பரப்பு பேரூராட்சி நடுப்பாளையத்தை சேர்ந்தவர் மோகன் (வயது 43) இவர் வெள்ளோட்டாம் பரப்பு அ.தி.மு.க. மாணவரணி செயலாளர் மற்றும் தகவல் தொழிற்நுட்ப பிரிவில் உள்ளார்.
இவருக்கு நடுப்பாளையத்தில் விவசாய இடம் உள்ளது. அந்த விவசாய இடத்தை சர்வே செய்து தர வேண்டும் என கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அதற்கான கட்டணத்தை செலுத்தினார். அரசு விதிப்படி இடத்தை பணம் கட்டிய 7 நாட்களுக்குள் சர்வே செய்து தகவல் தர வேண்டும்.
அதன் பின் 30 நாட்களுக்குள் முறைப்படி நிலத்தை அளந்து கொடுக்க வேண்டும். மோகன் இது குறித்து அதிகாரிகளை சந்தித்து நிலத்தை அளந்து கொடுக்கும் படி அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்தி வந்தார். ஆனால் அதிகாரிகள் நிலத்தை அளந்து கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று (செவ்வாய்கிழமை) காலை 6 மணிக்கு அ.தி.மு.க. பிரமுகர் மோகன் வெள்ளோட்டாம் பரப்பு கிராம நிர்வாக அலுவலகம் வந்தார். அவர் நடுப்பாளையம் கிராம நிர்வாக அலுவலர், மற்றும் கொடுமுடி நிலஅளவை துறையினரை கண்டித்து அலுவலகம் முன்பு திடீரென அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
இது பற்றி தகவல் அறிந்ததும் இன்று காலை கிளாம்பாடி நில வருவாய் ஆய்வாளர் தங்கமணி, வெள்ளோட்டம் பரப்பு கிராம நிர்வாக அதிகாரி வாசுகி மற்றும் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
அவர்கள் அ.தி.மு.க. பிரமுகரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அவர் நிலத்தை அளந்து தந்தால் தான் இங்கு இருந்து வருவேன் என கூறினார். இதையடுத்து நிலத்தை அளந்து தர அதிகாரிகள் உறுதி கூறினர். தொடர்ந்து கொடுமுடி சர்வேயர் கோபி அவர் இடத்தை அளந்து கொடுப்பதற்காக சென்றார். இதையடுத்து அவர் போராட்டத்தை கைவிட்டு சென்றார்.
அ.தி.மு.க. பிரமுகரே அரசு அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story






