என் மலர்
செய்திகள்

கல்வி கட்டணத்தை குறைக்க கோரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து இன்று 2-வது நாளாக போராட்டம் நடத்தினர்.
பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் 2-வது நாளாக போராட்டம்
கல்வி கட்டணத்தை குறைக்ககோரி பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் போக்குவரத்து துறையின் கீழ் செயல்பட்டு வந்த மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுகாதார துறையின் கீழ் இயங்கும் அரசு மருத்துவ கல்லூரி, மருத்துவமனையாக மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையாகவும் தற்போது கொரோனா சிறப்பு மருத்துவமனையாகவும் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் மருத்துவம் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் அரசு மருத்துவ கல்லூரியாக அறிவிக்கபட்டும் தனியார் மருத்துவ கல்லூரியில் வசூலிக்கும் கல்வி கட்டணமான 4 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுவதாகவும், அரசு கல்லூரியில் வசூலிக்கும் 13 ஆயிரத்து 600 ரூபாயை கல்லூரி நிர்வாகம் வசூலிக்க வேண்டும் என்று மாணவ-மாணவிகள் அவர்களது பெற்றோர்கள் தொடர்ந்து தமிழக அரசிடம் கோரிக்கையை முன்வைத்து நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக வகுப்புகளை புறக்கணித்து கல்வி கட்டணத்தை குறைக்க கோரி 100- க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்லூரியின் முன்பு அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசு கல்வி கட்டணத்தை குறைத்து உத்தரவு வழங்கும் வரையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் போக்குவரத்து துறையின் கீழ் செயல்பட்டு வந்த மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுகாதார துறையின் கீழ் இயங்கும் அரசு மருத்துவ கல்லூரி, மருத்துவமனையாக மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையாகவும் தற்போது கொரோனா சிறப்பு மருத்துவமனையாகவும் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் மருத்துவம் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் அரசு மருத்துவ கல்லூரியாக அறிவிக்கபட்டும் தனியார் மருத்துவ கல்லூரியில் வசூலிக்கும் கல்வி கட்டணமான 4 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுவதாகவும், அரசு கல்லூரியில் வசூலிக்கும் 13 ஆயிரத்து 600 ரூபாயை கல்லூரி நிர்வாகம் வசூலிக்க வேண்டும் என்று மாணவ-மாணவிகள் அவர்களது பெற்றோர்கள் தொடர்ந்து தமிழக அரசிடம் கோரிக்கையை முன்வைத்து நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக வகுப்புகளை புறக்கணித்து கல்வி கட்டணத்தை குறைக்க கோரி 100- க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்லூரியின் முன்பு அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசு கல்வி கட்டணத்தை குறைத்து உத்தரவு வழங்கும் வரையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story






