search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சிவகாசி அருகே மண் அள்ளிய டிராக்டர் பறிமுதல் 4 பேர் மீது வழக்குப்பதிவு

    சிவகாசி அருகே மண் அள்ளிய டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகாசி:

    சிவகாசி வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணசாமி, கிராம நிர்வாக அலுவலர் உமாராணி, கிராம நிர்வாக உதவியாளர் மாரிமுத்து ஆகியோர் நெடுங்குளம் கண்மாய்க்கு சென்ற போது அங்கு வடப்பட்டியை சேர்ந்த கந்தசாமி மகன் ரங்கராஜன், சிந்தட்டி என்கிற அய்யாதுரை மகன் முருகன் மேலும் 2 பேர் பொக்லைன் எந்திரம் உதவியுடன் டிராக்டரில் மண் அள்ளியது தெரியவந்தது. 

    இதை தொடர்ந்து அவர்களை பிடிக்க முயன்ற போது வாகனத்துடன் 4 பேரும் தப்பி ஓடி விட்டனர். கிராவல் மண்ணுடன் பிடிப்பட்ட டிராக்டரை, கிராம நிர்வாக அலுவலர் உமாராணி எம்.புதுப்பட்டி போலீசில் ஒப்படைத்தார். அந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×