search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    என்ஜினீயர் செந்தில் குமார்
    X
    என்ஜினீயர் செந்தில் குமார்

    கொரோனா காலத்தில் 15 வகையான பாரம்பரியமான நெல் ரகங்களை சாகுபடி செய்த என்ஜினீயர்

    கொரோனா காலத்தில் வழக்கத்தில் இருந்து காணாமல் போன பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகளை தேடி பிடித்து வாங்கி வந்து என்ஜினீயர் பயிரிட்டுள்ளார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் என்ஜினீயர் செந்தில் குமார். ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இயற்கை விவசாயத்தில் ஆர்வம் கொண்டு, வார விடுமுறை தினத்தில் வயலுக்கு வந்து வேலை செய்து வந்த இவருக்கு, கொரோனா ஊரடங்கும், வீட்டில் இருந்தே பணியும் தனது விவசாய ஆர்வத்தையும் அதற்கான வாய்ப்பையும் அதிகரித்தது. பணி நேரம் போக எஞ்சிய நேரத்தில் தனக்கு சொந்தமான 11 ஏக்கர் நிலத்தில் இயற்கை நெல் சாகுபடியில் களம் இறங்கினார்.

    வழக்கத்தில் இருந்து காணாமல் போன பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகளை தேடி பிடித்து வாங்கி வந்து பயிரிட்டுள்ளார். இதில் குறிப்பாக, கருப்பு கவுனி, வாசனை சீரக சம்பா, கல்லுரண்டை, புத்தர் சாப்பிட்டதாக கருதப்படும் காளான் நமக், கருடன் சம்பா, தங்க சம்பா, பூங்கார், கருங்குருவை, இலுப்பை பூ சம்பா மற்றும் ஆள் உயரத்திற்கு வளரும் மாப்பிள்ளை சம்பா என 15 வகையான ரகங்களை பயிரிட்டுள்ளார்.

    இதில் பெரும்பாலான ரகங்கள் வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன.

    சிறு வயதிலிருந்தே எனக்கு விவசாயம் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் இருந்தது. விவசாயத்தைப் பற்றி தெரிந்து கொண்டேன்.தற்போது காலமாற்றத்தால் அனைத்தும் மாறிவிட்டன நான் ஐ.டி. துறையில் வேலை பார்த்து வந்தாலும் விவசாயம் மீதான ஆர்வம் குறையவில்லை.

    எனக்கு சொந்தமான நிலத்தை இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். இப்போது கொரோனாவால் வீட்டிலிருந்தே வேலை செய்து வருகிறேன். இதனால் வேலை நேரம் போக மீதி நேரங்களில் விவசாயத்திற்காக பணியை ஒதுக்கி உள்ளேன்.

    இயற்கை முறையில் விதைப்போம் அறுப்போம் என்ற முறையில் எவ்வித பயிர் மேலாண்மையும் செய்யாமல் விளைவித்து வருகிறேன். என்னை பார்த்து நண்பர்களும், கிராமத்தினரும் பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட ஆர்வம் காட்டி வருகின்றனர். விளைவித்த நெல்லை தனது தேவைக்கு போக மற்றவர்களுக்கு விதை நெல்லாக கொடுத்து மீண்டும் பாரம்பரிய பயிர் ரகங்களை மீட்டெடுக்க போகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இவரின் இந்த முயற்சியை இயற்கை வேளாண் விவசாயிகள் பலரும் பாராட்டியுள்ளனர். மேலும் மற்ற மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் இங்கு வந்து ஆர்வத்துடன் பார்வை யிட்டு செல்கின்றனர். ஐ.டி. துறையில் பணி, கை நிறைய சம்பளம் என நிற்காமல், வேளாண்மையில் கால் பதித்து பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் இவரது முயற்சி, இயற்கை ஆர்வலர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
    Next Story
    ×