
புதுவையில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி அளிக்கும் நிறுவனம் நடத்தி வருபவர் அரவிந்த்.
நீச்சல் பயிற்சியாளரான அரவிந்த் தனது குழுவினருடன் ஆழ்கடலில் பல புதுவிதமான முயற்சிகளில் ஈடுபடுவது உண்டு. அதுபோல் ஆழ்கடலில் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடி வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
புதுவை கடற்கரை சாலை காந்தி சிலையில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரம் கடல் பகுதியில் ஆழ்கடலுக்கு சென்று கிறிஸ்துமசை கொண்டாடினார்.
இந்த கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் பி.வி.சி. பைப் மூலம் தயாரிக்கப்பட்ட சாண்டா கிளாஸ் வாகனம் கடலுக்குள் இறக்கப்பட்டது.
அந்த வாகனத்தில் சாண்டா கிளாஸ் உடை அணிந்து வந்த நீச்சல் வீரர் அரவிந்த் மற்றும் அவரது குழுவினருக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதேபோல் விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள கல்குவாரியில் உள்ள நீர் நிலையின் ஆழத்திலும் அரவிந்த் குழுவினர் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினர்.