என் மலர்

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    கோவையில் ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கி ரூ.27 லட்சம் பறிப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கேரள ரியல் எஸ்டேட் அதிபரை கத்தியை காட்டி மிரட்டி ரூ.27 லட்சம் பணத்துடன் காரை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
    செட்டிப்பாளையம்:

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பூக்கோட்டூரை சேர்ந்தவர் அப்துல் சலாம் (வயது 50). ரியல் எஸ்டேட் அதிபர். இவர் தனது கார் டிரைவர் அதே பகுதியை சேர்ந்த சம்சுதீன் (42) என்பவருடன் தொழில் சம்பந்தமாக நேற்று கோவைக்கு வந்து இருந்தார்.

    வேலை முடிந்து அப்துல் சலாம் இன்று அதிகாலை தனது காரில் கேரளாவுக்கு புறப்பட்டு சென்றார். காரை டிரைவர் சம்சுதீன் ஓட்டிச் சென்றார்.

    கார் அதிகாலை 4.30 மணியளவில் கோவை- பாலக்காடு ரோட்டில் நவக்கரை நந்திகோவில் அருகே சென்று கொண்டு இருந்தது. அப்போது மற்றொரு காரில் பின் தொடர்ந்து வந்த 5 பேர் கொண்ட கும்பல் அப்துல் சலாம் சென்ற காரை வழி மறித்து நிறுத்தினர்.

    பின்னர் அந்த கும்பல் கத்தி, இரும்பு கம்பி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் காரில் இருந்து இறங்கி வந்து அப்துல் சலாம், டிரைவர் சம்சுதீன் ஆகியோரை கொலை செய்து விடுவதாக கத்தியை காட்டி மிரட்டினர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட்டார். அப்போது அந்த கும்பல் அப்துல்சலாம், சம்சுதீன் ஆகியோரை தாக்கி காரை விட்டு கீழே தள்ளினர். பின்னர் அவர்கள் காரில் இருந்து ரூ.27 லட்சம் பணத்துடன், காரை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.

    இது குறித்து அப்துல் சலாம் கே.ஜி.சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் கொள்ளையர்களின் கார் கேரளா நோக்கி சென்றதாக அப்துல் சலாம் தெரிவித்தார்.

    பின்னர் கே.ஜி. சாவடி போலீசார் இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா, டி.ஐ.ஜி. நரேந்திரன் நாயர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு ஆகியோர் சம்பவஇடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    இது குறித்து கே.ஜி.சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கேரள ரியல்எஸ்டேட் அதிபரை கத்தியை காட்டி மிரட்டி ரூ.27 லட்சம் பணத்துடன் காரை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்ற மர்ம கும்பலை தேடி வருகிறார்கள். மேலும் அப்துல் சலாம் வந்த காரின் பதிவு எண்களை சோதனை சாவடியில் உள்ள போலீசார் மற்றும் சுங்கச்சாவடி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    மேலும் சுங்கச்சாவடி வழியாக அந்த பதிவு எண் கொண்ட கார் கடந்து சென்று உள்ளதா? என கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்து வருகிறார்கள்.

    அதிகாலையில் ரியல்எஸ்டேட் அதிபரை மிரட்டி பணத்துடன் காரை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×