என் மலர்
செய்திகள்

திமுக சார்பில் போட்டியிடும் செந்தில்குமார் - அதிமுக சார்பில் போட்டியிடும் பொன்மணி பாஸ்கரன்
சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தல் நாளை நடக்கிறது
4 முறை ஒத்திவைக்கப்பட்ட சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத்தலைவர் தேர்தல் நாளை நடக்கிறது.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டத்தில் மொத்தமுள்ள 16 மாவட்ட ஊராட்சி வார்டுகளில், அ.தி.மு.க. கூட்டணி 8 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 8 இடங்களில் (தி.மு.க. 5, காங்கிரஸ் 2, இந்திய ஜனநாயக கட்சி 1) வென்றன. இதனால் அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணி சமபலத்தில் இருக்கிறது. இந்தநிலையில் கடந்த ஜனவரி 11, ஜனவரி 30, மார்ச் 4 ஆகிய தேதிகளில் அறிவிக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் தேர்தலை அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தொடர்ந்து புறக்கணித்ததால் பெரும்பான்மை இல்லாமல் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இதனால் தி.மு.க.வை சேர்ந்த மாவட்ட கவுன்சிலர்கள் சிலர் தேர்தலை நடத்த வலியுறுத்தி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையின்போது இருவாரத்திற்குள் தேர்தல் நடத்தப்படும் என தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதற்கிடையே கடந்த 4-ந் தேதி சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அப்போது கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக கடந்த 4-ந் தேதி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிவகங்கை வந்தார். இதன் காரணமாக மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர் தேர்தல் 4-வது முறையாக ஒத்திவைக்கபட்டது
இந்தநிலையில் அந்த தேர்தல் நாளை(வெள்ளிக்கிழமை) சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் தலைவர் பதவிக்கு காலையிலும், துணைத் தலைவர் பதவிக்கு மாலை யிலும் தேர்தல் நடக்கிறது.
இந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் 1-வது வார்டு கவுன்சிலர் பொன்மணி பாஸ்கரனும், தி.மு.க. சார்பில் 7-வது வார்டு கவுன்சிலர் செந்தில்குமாரும் போட்டியிடுகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் மொத்தமுள்ள 16 மாவட்ட ஊராட்சி வார்டுகளில், அ.தி.மு.க. கூட்டணி 8 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 8 இடங்களில் (தி.மு.க. 5, காங்கிரஸ் 2, இந்திய ஜனநாயக கட்சி 1) வென்றன. இதனால் அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணி சமபலத்தில் இருக்கிறது. இந்தநிலையில் கடந்த ஜனவரி 11, ஜனவரி 30, மார்ச் 4 ஆகிய தேதிகளில் அறிவிக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் தேர்தலை அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தொடர்ந்து புறக்கணித்ததால் பெரும்பான்மை இல்லாமல் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இதனால் தி.மு.க.வை சேர்ந்த மாவட்ட கவுன்சிலர்கள் சிலர் தேர்தலை நடத்த வலியுறுத்தி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையின்போது இருவாரத்திற்குள் தேர்தல் நடத்தப்படும் என தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதற்கிடையே கடந்த 4-ந் தேதி சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அப்போது கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக கடந்த 4-ந் தேதி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிவகங்கை வந்தார். இதன் காரணமாக மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர் தேர்தல் 4-வது முறையாக ஒத்திவைக்கபட்டது
இந்தநிலையில் அந்த தேர்தல் நாளை(வெள்ளிக்கிழமை) சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் தலைவர் பதவிக்கு காலையிலும், துணைத் தலைவர் பதவிக்கு மாலை யிலும் தேர்தல் நடக்கிறது.
இந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் 1-வது வார்டு கவுன்சிலர் பொன்மணி பாஸ்கரனும், தி.மு.க. சார்பில் 7-வது வார்டு கவுன்சிலர் செந்தில்குமாரும் போட்டியிடுகின்றனர்.
Next Story






