என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுவையில் மதுபானங்களுக்கு கொரோனா வரி மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிப்பு
Byமாலை மலர்1 Dec 2020 9:40 AM GMT (Updated: 1 Dec 2020 9:40 AM GMT)
புதுவையில் மதுபானங்களுக்கு கலால் துறை சார்பில் சிறப்பு கலால் வரியை மேலும் 2 மாதங்களுக்கு கவர்னர் கிரண்பேடி நீட்டித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவையில் கொரோனோ தொற்று பரவ தொடங்கிய மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
ஊரடங்கின் தொடக்கத்தில் மதுபான கடைகள், மதுபார்கள் மூடப்பட்டது. 2 மாதங்களுக்கு பிறகு மே 24-ந்தேதி மீண்டும் மதுக்கடைகளை திறக்க அரசு அனுமதித்தது.
அப்போது, மதுபானங்களுக்கு கொரோனா வரி விதிக்கப்பட்டது. இந்த வரி காலம் முதலில் ஆகஸ்டு மாதம் வரை இருந்தது. அதையடுத்து நவம்பர் 30-ந் தேதி வரை சிறப்பு கலால் வரி என நீட்டிக்கப்பட்டது.
தற்போது இந்த வரியை நீக்கக்கோரி கடந்த 29-ந் தேதி கோப்பு அரசு தரப்பில் இருந்து அனுப்பப்பட்டது. ஆனால், அதை கவர்னர் கிரண்பேடி ஏற்கவில்லை.
அதே நேரத்தில் கலால் துறை சார்பில் சிறப்பு கலால் வரியை மேலும் 2 மாதங்களுக்கு கவர்னர் கிரண்பேடி நீட்டித்துள்ளார்.
அதன்படி இந்த உத்தரவு வரும் ஜனவரி 31-ந்தேதி வரை அமலில் இருக்கும் என கலால்துறை உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி கவர்னர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தொற்றில் இருந்து புதுவை தற்போது மீண்டு வருகிறது. விரைவில் பண்டிகைகளான கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் ஆகியவை தொடர்ந்து வருகிறது.
அதனால் பண்டிகை காலம் முடிந்த பிறகு மீண்டும் இக்கோப்பை தாக்கல் செய்யலாம். அத்துடன் புதுவை அருகில் உள்ள மாநிலங்களான தமிழகம், ஆந்திரா, கேரளாவில் நிலவும் தொற்றின் அடிப்படையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கவர்னர் தெரிவித்துள்ளார்.
புதுவையில் கொரோனோ தொற்று பரவ தொடங்கிய மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
ஊரடங்கின் தொடக்கத்தில் மதுபான கடைகள், மதுபார்கள் மூடப்பட்டது. 2 மாதங்களுக்கு பிறகு மே 24-ந்தேதி மீண்டும் மதுக்கடைகளை திறக்க அரசு அனுமதித்தது.
அப்போது, மதுபானங்களுக்கு கொரோனா வரி விதிக்கப்பட்டது. இந்த வரி காலம் முதலில் ஆகஸ்டு மாதம் வரை இருந்தது. அதையடுத்து நவம்பர் 30-ந் தேதி வரை சிறப்பு கலால் வரி என நீட்டிக்கப்பட்டது.
தற்போது இந்த வரியை நீக்கக்கோரி கடந்த 29-ந் தேதி கோப்பு அரசு தரப்பில் இருந்து அனுப்பப்பட்டது. ஆனால், அதை கவர்னர் கிரண்பேடி ஏற்கவில்லை.
அதே நேரத்தில் கலால் துறை சார்பில் சிறப்பு கலால் வரியை மேலும் 2 மாதங்களுக்கு கவர்னர் கிரண்பேடி நீட்டித்துள்ளார்.
அதன்படி இந்த உத்தரவு வரும் ஜனவரி 31-ந்தேதி வரை அமலில் இருக்கும் என கலால்துறை உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி கவர்னர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தொற்றில் இருந்து புதுவை தற்போது மீண்டு வருகிறது. விரைவில் பண்டிகைகளான கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் ஆகியவை தொடர்ந்து வருகிறது.
அதனால் பண்டிகை காலம் முடிந்த பிறகு மீண்டும் இக்கோப்பை தாக்கல் செய்யலாம். அத்துடன் புதுவை அருகில் உள்ள மாநிலங்களான தமிழகம், ஆந்திரா, கேரளாவில் நிலவும் தொற்றின் அடிப்படையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கவர்னர் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X