என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிருஷ்ணகிரி அருகே 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்
Byமாலை மலர்1 Dec 2020 7:07 AM GMT (Updated: 1 Dec 2020 7:07 AM GMT)
கிருஷ்ணகிரி அருகே 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக கோழிப்பண்ணை ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே உள்ள மாதேப்பட்டி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியின் 16 வயது மகள், கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 21-ந் தேதி பள்ளியில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த அந்த சிறுமியிடம், அதே பகுதியை சேர்ந்த கோழிப்பண்ணையில் வேலை செய்யும் மதன்(25) என்பவர், தனது இருசக்கர வாகனத்தில், வீட்டிற்கு போகலாம் வா என அழைத்து கொண்டு சென்றார்.
அப்போது போகும் வழியில் உள்ள தானம்பட்டி மலைப்பகுதிக்கு அழைத்து சென்று, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதே போல் அடிக்கடி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சிறுமி வற்புறுத்தியுள்ளார். ஆனால் தற்போது மதன் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி நேற்று கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சவிதா, போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள மதனை தேடி வருகிறார்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள மாதேப்பட்டி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியின் 16 வயது மகள், கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 21-ந் தேதி பள்ளியில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த அந்த சிறுமியிடம், அதே பகுதியை சேர்ந்த கோழிப்பண்ணையில் வேலை செய்யும் மதன்(25) என்பவர், தனது இருசக்கர வாகனத்தில், வீட்டிற்கு போகலாம் வா என அழைத்து கொண்டு சென்றார்.
அப்போது போகும் வழியில் உள்ள தானம்பட்டி மலைப்பகுதிக்கு அழைத்து சென்று, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதே போல் அடிக்கடி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சிறுமி வற்புறுத்தியுள்ளார். ஆனால் தற்போது மதன் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி நேற்று கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சவிதா, போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள மதனை தேடி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X