search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பவானிசாகர் அணை
    X
    பவானிசாகர் அணை

    பவானிசாகர் அணை நிலவரம்

    105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணை இன்று காலை நேர நிலவரபடி 96.09 அடியாக உள்ளது.
    ஈரோடு:

    பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணை இன்று காலை நேர நிலவரபடி 96.09 அடியாக உள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 3166 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 800 கனஅடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 2300 கனஅடியும் என மொத்தம் 3100 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    கோவை மாவட்டம் பில்லூர் அணையில் இருந்து மின் உற்பத்திக்கு தண்ணீர் திறந்து விடப்படுவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
    Next Story
    ×