என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சத்தியமங்கலத்தில் ஆளுயர தேன் வாழைத்தார் ரூ.1000-க்கு ஏலம்

    சத்தியமங்கலத்தில் நடைபெற்ற வாழைத்தார் ஏலத்தில் 2 தேன் வாழைத்தாரில் ஒரு வாழைத்தார் ரூ. 1000-க்கும், மற்றொரு வாழைத்தார் ரூ. 800-க்கும் ஏலம் போனது.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் வாரந்தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வாழைத்தார் ஏலம் நடைபெற்று வருவது வழக்கம்.

    சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அரசூர், பெரியூர், உக்கிரம், செண்பகபுதூர், பவானிசாகர், சக்கரசம் பாளையம், கே.என்.பாளையம், அரியப்பம் பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 2,056 வாழைத்தார்களை ஏலத்திற்கு கொண்டு வந்தனர்.

    இதில் செண்பகப்புதூரைச் சேர்ந்த விவசாயி சஞ்சீவி என்பவர் தனது தோட்டத்தில் விளைந்த ஆளுயர 2 தேன் வாழைத்தார்களை விற்பனைக்குக் கொண்டுவந்தார். இந்த ஆளுயர தேன் வாழைத்தாரில் 18 சீப்புகள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட வாழைக்காய்கள் இருந்தன.

    இந்த வாழைத்தாரை ஏலம் எடுக்க வியாபாரிகள் இடையே கடும் போட்டி நிலவியது. விவசாயி சஞ்சீவி கொண்டு வந்த இந்த 2 வாழைத்தாரில் ஒரு வாழைத்தார் ரூ. 1000-க்கும், மற்றொரு வாழைத்தார் ரூ. 800-க்கும் ஏலம் போனது.
    Next Story
    ×