என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவண்ணாமலை ஓட்டலில் வாங்கிய சிக்கனில் புழு இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி
Byமாலை மலர்31 Oct 2020 4:13 AM GMT (Updated: 31 Oct 2020 4:13 AM GMT)
திருவண்ணாமலை ஓட்டலில் வாங்கிய சிக்கனில் புழு இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் உள்ள ஒரு பிரியாணி கடையில் நேற்று முன்தினம் வாடிக்கையாளர் ஒருவர் 2 கிரில் சிக்கன் பார்சல் வாங்கி உள்ளார். பின்னர் அவர் தனது நண்பர்களுடன் வீட்டிற்கு சென்று சிக்கனை சாப்பிட தொடங்கி உள்ளார். சிக்கனை அவர்கள் சாப்பிட்டு கொண்டிருந்த போது அதில் புழு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அந்த சிக்கனை சம்பந்தப்பட்ட பிரியாணி கடைக்கு கொண்டு சென்று காண்பித்து உள்ளார். கடையின் உரிமையாளர் உடனடியாக சிக்கனை கீழே கொட்டி விட்டு, கிரில் சிக்கனுக்காக அவர் கொடுத்த பணத்தை திரும்ப கொடுத்து இதை பெரிது படுத்த வேண்டாம் என்று சமாதானம் செய்து அனுப்பி உள்ளார்.
இந்த தகவல் வாட்ஸ்- அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது குறித்து திருவண்ணாமலை உணவு பாதுகாப்பு துறை அதிகாரியிடம் கேட்ட போது, இது குறித்து எந்த தகவலும் வரவில்லை. மேலும் இன்று (நேற்று) விடுமுறை, நான் வெளியே இருக்கிறேன் என்று பதில் அளித்தார். பொதுமக்கள் வாங்கும் உணவு பொருட்கள் தரமானதாக உள்ளதா என்றும், பாதுகாப்பானதா என்றும் கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு பணி மேற்கொண்டு பொதுமக்களுக்கு தரமான உணவு பொருட்கள் கிடைக்க மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
திருவண்ணாமலையில் உள்ள ஒரு பிரியாணி கடையில் நேற்று முன்தினம் வாடிக்கையாளர் ஒருவர் 2 கிரில் சிக்கன் பார்சல் வாங்கி உள்ளார். பின்னர் அவர் தனது நண்பர்களுடன் வீட்டிற்கு சென்று சிக்கனை சாப்பிட தொடங்கி உள்ளார். சிக்கனை அவர்கள் சாப்பிட்டு கொண்டிருந்த போது அதில் புழு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அந்த சிக்கனை சம்பந்தப்பட்ட பிரியாணி கடைக்கு கொண்டு சென்று காண்பித்து உள்ளார். கடையின் உரிமையாளர் உடனடியாக சிக்கனை கீழே கொட்டி விட்டு, கிரில் சிக்கனுக்காக அவர் கொடுத்த பணத்தை திரும்ப கொடுத்து இதை பெரிது படுத்த வேண்டாம் என்று சமாதானம் செய்து அனுப்பி உள்ளார்.
இந்த தகவல் வாட்ஸ்- அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது குறித்து திருவண்ணாமலை உணவு பாதுகாப்பு துறை அதிகாரியிடம் கேட்ட போது, இது குறித்து எந்த தகவலும் வரவில்லை. மேலும் இன்று (நேற்று) விடுமுறை, நான் வெளியே இருக்கிறேன் என்று பதில் அளித்தார். பொதுமக்கள் வாங்கும் உணவு பொருட்கள் தரமானதாக உள்ளதா என்றும், பாதுகாப்பானதா என்றும் கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு பணி மேற்கொண்டு பொதுமக்களுக்கு தரமான உணவு பொருட்கள் கிடைக்க மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X