என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை- 3 டாஸ்மாக் கடைகளில் ரூ.60 ஆயிரம் பறிமுதல்
Byமாலை மலர்31 Oct 2020 1:45 AM GMT (Updated: 31 Oct 2020 1:45 AM GMT)
வேலூரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 3 டாஸ்மாக் கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். விடிய விடிய நடந்த இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.60 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றன. மிலாதுநபியைமுன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளததால் நேற்று முன்தினம் மதுபானங்கள் வாங்க மதுபிரியர்கள் கடைகளில் அலைமோதினர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் வேலூர் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஹேமச்சந்திரா தலைமையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் வேலூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள டாஸ்மாக் கடை மற்றும் பென்னாத்தூரில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளில் திடீரென சோதனை நடத்தினர்.
இதனால் விற்பனையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சோதனை நடந்தபோது மதுபானங்கள் விற்பனை செய்யப்படாததால் குடிமகன்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்தசோதனை நேற்று அதிகாலை வரை விடிய, விடிய நடந்தது.
சோதனையின் போது விற்பனை செய்யப்பட்ட மதுபானத்தின் மூலம் பெறப்பட்ட பணத்துக்கும், இருப்பில் உள்ள பணத்துக்கும் ஒப்பீடு செய்து கணக்கெடுத்தனர். இதில் 3 கடைகளையும் சேர்த்து ரூ.60 ஆயிரத்து 900 கூடுதலாக வசூல் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மூலம் மதுபானம் கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது. பென்னாத்தூரில் உள்ள ஒரு கடையில் ரூ.4 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை கள்ளச்சந்தையில் விற்க வெளியில் கொடுத்துள்ளது தெரியவந்தது.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வேலூர் மற்றும் பென்னாத்தூர் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றன. மிலாதுநபியைமுன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளததால் நேற்று முன்தினம் மதுபானங்கள் வாங்க மதுபிரியர்கள் கடைகளில் அலைமோதினர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் வேலூர் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஹேமச்சந்திரா தலைமையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் வேலூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள டாஸ்மாக் கடை மற்றும் பென்னாத்தூரில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளில் திடீரென சோதனை நடத்தினர்.
இதனால் விற்பனையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சோதனை நடந்தபோது மதுபானங்கள் விற்பனை செய்யப்படாததால் குடிமகன்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்தசோதனை நேற்று அதிகாலை வரை விடிய, விடிய நடந்தது.
சோதனையின் போது விற்பனை செய்யப்பட்ட மதுபானத்தின் மூலம் பெறப்பட்ட பணத்துக்கும், இருப்பில் உள்ள பணத்துக்கும் ஒப்பீடு செய்து கணக்கெடுத்தனர். இதில் 3 கடைகளையும் சேர்த்து ரூ.60 ஆயிரத்து 900 கூடுதலாக வசூல் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மூலம் மதுபானம் கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது. பென்னாத்தூரில் உள்ள ஒரு கடையில் ரூ.4 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை கள்ளச்சந்தையில் விற்க வெளியில் கொடுத்துள்ளது தெரியவந்தது.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வேலூர் மற்றும் பென்னாத்தூர் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X