என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிறுமிக்கு பாலியல் கொடுமை: புதுவை மின்துறை ஊழியருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை
Byமாலை மலர்14 Oct 2020 6:25 AM GMT (Updated: 14 Oct 2020 6:25 AM GMT)
புதுவை அருகே 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக மின்துறை ஊழியருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை அருகே உள்ள அபிஷேகப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத் (வயது 30).
புதுவை அரசின் மின்துறை ஊழியரான இவர் வீடு, வீடாக சென்று மின் மீட்டர் ரீடிங் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். அதன்படி வினோத் பாகூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வீடுகளில் மீட்டர் ரீடிங் கணக்கெடுக்கும் பணியில் கடந்த 15.5.2019-ல் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் வினோத் மின் மீட்டர் ரீடிங் எடுத்தபோது அந்த வீட்டில் தனியாக இருந்த 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது பற்றி கூறினால் கொலை செய்து விடுவதாக சிறுமியை மிரட்டி விட்டு வினோத் அங்கிருந்து சென்று விட்டார்.
சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த பெற்றோரிடம் நடந்த விவரத்தை கூறி சிறுமி அழுதுள்ளார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பாகூர் போலீசார் வினோத்தை கைது செய்து வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கு விசாரணை தலைமை நீதிபதி தனபால் முன்பாக நடந்து வந்தது. இந்த நிலையில் வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. தீர்ப்பில் நீதிபதி தனபால் பாலியல் குற்றத்திற்கு வினோத்துக்கு 10 ஆண்டுகளும், அத்து மீறி வீட்டிற்குள் நுழைந்த குற்றத்திற்கு 7 ஆண்டுகளும், தப்ப முயன்ற சிறுமியை தடுத்து அடைத்த குற்றத்திற்கு 6 மாத ஜெயில் தண்டனையும், ரூ 2 ஆயிரம் அபராதமும் விதித்தார்.
ஜெயில் தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
புதுவை அருகே உள்ள அபிஷேகப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத் (வயது 30).
புதுவை அரசின் மின்துறை ஊழியரான இவர் வீடு, வீடாக சென்று மின் மீட்டர் ரீடிங் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். அதன்படி வினோத் பாகூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வீடுகளில் மீட்டர் ரீடிங் கணக்கெடுக்கும் பணியில் கடந்த 15.5.2019-ல் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் வினோத் மின் மீட்டர் ரீடிங் எடுத்தபோது அந்த வீட்டில் தனியாக இருந்த 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது பற்றி கூறினால் கொலை செய்து விடுவதாக சிறுமியை மிரட்டி விட்டு வினோத் அங்கிருந்து சென்று விட்டார்.
சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த பெற்றோரிடம் நடந்த விவரத்தை கூறி சிறுமி அழுதுள்ளார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பாகூர் போலீசார் வினோத்தை கைது செய்து வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கு விசாரணை தலைமை நீதிபதி தனபால் முன்பாக நடந்து வந்தது. இந்த நிலையில் வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. தீர்ப்பில் நீதிபதி தனபால் பாலியல் குற்றத்திற்கு வினோத்துக்கு 10 ஆண்டுகளும், அத்து மீறி வீட்டிற்குள் நுழைந்த குற்றத்திற்கு 7 ஆண்டுகளும், தப்ப முயன்ற சிறுமியை தடுத்து அடைத்த குற்றத்திற்கு 6 மாத ஜெயில் தண்டனையும், ரூ 2 ஆயிரம் அபராதமும் விதித்தார்.
ஜெயில் தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X